Header Ads



நாங்கள் மீண்டெழுந்து விட்டோம்


“காலிமுகத்திடல் போராட்டக்காரர்களைக் காடையர்கள்“ என்று  ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விமலவீர திஸாநாயக்க விமர்சித்துள்ளார். 


இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில், “காலிமுகத்திடல் போராட்டக்காரர்களே நாட்டைச் சீரழித்தார்கள், இவர்களை வரலாறு ஒருபோதும் மன்னிக்காது“ எனவும் குறிப்பிட்டுள்ளார்.


அத்துடன் “ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி என்பது பீனிக்ஸ் பறவை போன்றது.


எம்மை எவராலும் அழிக்க முடியாது, அழித்தாலும் மீண்டெழுவோம். இதனை இம்முறை மே தினக் கூட்டத்தில் நிரூபித்துக் காட்டியுள்ளோம்“ எனவும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.