Header Ads



திருமணத்திற்கு சென்றவர்கள் வைத்தியசாலையில் அனுமதி


மன்னார் பிரதான பாலத்துக்கு அருகில் இன்று (23) காலை 11 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்ததோடு,மேலும் சிறுவர்கள் உள்ளடங்களாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் படுகாயமடைந்துள்ளனர்.


மன்னாரில் இருந்து பிரதான பாலம் ஊடாக பயணித்த மகேந்திரா ரக வாகனம் மற்றும் மதவாச்சி வீதியூடாக மன்னார் நோக்கி பயணித்த முச்சக்கரவண்டியும் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

வவுனியா மாவட்டத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கணவன் மனைவி உட்பட 9 வயது,6 வயது,4 வயதுடைய மூன்று பிள்ளைகள் உள்ளடங்களாக ஐவர், திருமண நிகழ்வு ஒன்றிற்காக முச்சக்கர வண்டியில் வருகை தந்த நிலையில் விபத்து இடம்பெற்றுள்ளது.


இந்த திருமண நிகழ்வு நாளை (24) நடைபெறவுள்ள நிலையில் மன்னாரில் இருந்து தள்ளாடி நோக்கி பயணித்த மஹேந்திரா ரக வாகனம் கட்டுப்பாட்டை இழந்து முச்சக்கர வண்டியில் மோதியது.

இந்த நிலையில் முச்சக்கர வண்டி சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் காயமடைந்த  ஏனையோர் மன்னார் பொது வைத்தியசாலையில் மேலதிக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார்  முன்னெடுத்து வருகின்றனர்.


No comments

Powered by Blogger.