Header Ads



பௌசியின் கட்சி உறுப்பினர் பதவியை, இடைநிறுத்த கட்சி தீர்மானம்


கட்சியின் தீர்மானங்களுக்கு எதிராக செயற்பட்டதன் காரணமாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஏ. எச். எம். பௌசியின் கட்சி உறுப்பினர் பதவியை இடைநிறுத்த கட்சி தீர்மானித்துள்ளது.  


சர்வதேச நாணய நிதியத்தின் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்ததன் அடிப்படையில் திங்கட்கிழமை (08) பிற்பகல் கூடிய கட்சியின் செயற்குழு இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.


ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாநகரசபை வேட்பாளர் பதவிக்கு போட்டியிடுவதற்காக முஜுபர் ரஹ்மான் தனது எம்.பி பதவியில் இருந்து விலகியதை அடுத்து, வெற்றிடமான பதவிக்கு  பௌசி தெரிவு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

2 comments:

  1. Good punishtment for him.

    ReplyDelete
  2. உங்களது காலம் முடிந்துவிட்டது பௌஸி அவர்களே. உடனடியாக அந்த பதவியை முஜீபுர்ரஹ்மானுக்கு மீண்டும் வழங்கிவிட்டு உடனடியாக ஒதுங்கிவிடுங்கள். சரி என்றால் என்ன பிழை என்றால் என்ன என விளங்க முடியாத வாழ்க்கை நிலைமையில் நீங்கள் தற்போது இருக்கின்றீர்கள். மற்றொருவர் கோட்டை உங்களுக்கு அணிவித்து மற்றவர்கள் அனைத்தையும் தயார்படுத்தி உங்களைப் பாராளுமன்றம் அனுப்பி யாரும் எதனையும் சாதிக்க முடியாது. வேறு பாராளுமன்றம் சென்ற சில நாட்களில் கட்சியின் கொள்கைக்கு முரணாக செயற்படுவது என்பது ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. எனவே மரியாதையாக அதனை உரியவருக்கு ஒப்படைத்துவிட்டு உடனடியாக ஒதுங்கிவிடுங்கள்.

    ReplyDelete

Powered by Blogger.