Header Ads



சிறுவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்


நாட்டின் சிறுவர்களுக்கான போசாக்கு மட்டத்தை உயர்த்தும் வகையில் விசேட வேலைத்திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தவுள்ளதாக பெண்கள் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.


அதன்படி, உத்தேச வேலைத்திட்டத்தின் கீழ் முன்பள்ளி சிறுவர்களுக்கு ஊட்டச்சத்து நிறைந்த பிஸ்கெட் வகையொன்றை வழங்குவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாகத்  அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.


மேலும்  அவர் கூறியுள்ளதாவது, இது தொடர்பான வேலைத்திட்டம் அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படும்.


சிறுவர்களுக்குத் தேவையான முட்டை போன்ற சத்தான உணவுகளைக் குறைந்த விலையில் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் .


அத்துடன், முன்பள்ளி சிறுவர்களுக்கு உயர் ஊட்டச்சத்துள்ள பிஸ்கெட் வகையை வழங்குவதற்கான புதிய திட்டத்தை நாங்கள் தொடங்க உள்ளோம். அதற்கான ஏற்பாடுகளை தற்போது செய்து வருகிறோம்.


அதன்படி ஜூன் மாதம் முதல் சிறுவர்களுக்கான பிஸ்கெட் விநியோகிக்கப்படும்.


மேலும், குழந்தைகளுக்கு முட்டை போன்ற சத்துள்ள உணவை வழங்குவதற்குத் தேவையான உணவுப் பொருட்களைக் குறைந்த விலையில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' எனத் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.