Header Ads



கோழி உரம் ஏற்றி வந்த லொறி விபத்து


கண்டி-நுவரெலியா பிரதான வீதியில் நுவரெலியா, பம்பரகல டொப்பாஸ் பகுதியில் லொறியொன்று இன்று விபத்துக்குள்ளானதில் சாரதி உட்பட மூவர் காயமடைந்துள்ளனர்.


குளியாப்பிட்டியவில் இருந்து நுவரெலியாவுக்கு கோழி உரத்தை ஏற்றிவந்த லொறியே வேகக்கட்டுப்பாட்டை இழந்து, பிரதான வீதியில் உள்ள வளைவு ஒன்றில், தடுப்பு வேலியையும் உடைத்துக்கொண்டு பள்ளத்தில் இருந்த தேயிலை தோட்டத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.


இவ் விபத்தில் சாரதி மற்றும் இரு உதவியாளர்கள்  காயமடைந்துள்ளனர்.


இப்பகுதியில் இதற்கு முன்னரும் பல விபத்துக்கள் இடம்பெற்றுள்ளமையால், குறித்த பகுதியில் வீதி அபிவிருத்தி அதிகார சபை பல வீதித்தடைகளை அமைத்துள்ளது.


விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



No comments

Powered by Blogger.