Header Ads



கர்நாடகவில் வெற்றிவாகை சூடியது காங்கிரஸ் - 'அன்பை நேசித்த மக்கள் கொடுத்த வெற்றி என்கிறார்' - ராகுல்


கர்நாடக சட்டமன்ற தேர்தலில் ஆட்சியமைக்கத் தேவையான பெரும்பான்மை இடங்களுக்கும் அதிகமாக காங்கிரஸ் கட்சி முன்னிலையில் இருக்கிறது. அங்கு ஆளும் பாரதிய ஜனதா கட்சி பின்தங்கியுள்ளது.


காங்கிரஸ் கட்சியின் வெற்றி முகத்தைத் தொடர்ந்து, பெங்களூரு மற்றும் டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகங்களில் தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


மணிப்பூரில் தேர்தல் முடிவுகள் வெளியானதும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பாரதிய ஜனதாவுக்கு தாவிய அண்மைக்கால வரலாற்றை கருத்தில் கொண்டு, வெற்றி பெறும் வேட்பாளர்கள் உடனே பெங்களூருவுக்கு விரைந்து வர வேண்டும் என்று அக்கட்சி உத்தரவிட்டுள்ளது.


இந்நிலையில், தேர்தல் வெற்றி குறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ""இது குரோனி முதலாளிகளுக்கும் (ஆட்சியில் உள்ளவர்களுடன் நெருக்காக இருந்து சலுகை அனுபவித்தல்) மாநிலத்தின் ஏழை மக்களுக்கும் இடையேயான போட்டி. இதில் ஏழை மக்கள், பண பலத்தை தோற்கடித்துள்ளனர்," என்றார்.


"ஏழைகளின் பிரச்னைகளுக்காக நாங்கள் போராடினோம், நான் விரும்பிய சிறந்த விஷயம் என்னவென்றால், நாங்கள் இந்த தேர்தலில் தவறான வார்த்தைகளை பிரயோகிக்கவில்லை. அன்பை இந்த நாடு நேசிக்கிறது என்பதை கர்நாடக மக்கள் காட்டியுள்ளனர். இது அனைவருக்கும் கிடைத்த வெற்றி. முதலில் இது கர்நாடக மக்களின் வெற்றி. ஏழை மக்களுக்கு ஐந்து வாக்குறுதிகளை அளித்துள்ளோம். மாநிலத்தின் முதலாவது அமைச்சரவை கூட்டத்தில் இந்த 5 வாக்குறுதிகளை நிறைவேற்றுவது பற்றி முடிவெடுப்போம்," என்று ராகுல் தெரிவித்தார்.


கர்நாடக தேர்தல்

முன்னிலை நிலவரம்

மொத்த தொகுதிகள் - 224


முன்னிலை நிலவரம் தெரிந்தவை: 224


பாஜக - 62


காங்கிரஸ் - 137


ஜனதா தளம் - 21


சுயேச்சை - 2


மற்றவை - 2

No comments

Powered by Blogger.