Header Ads



ATM இயந்திரத்தை கொள்ளையடிக்க வந்தவர்கள் தப்பியோட்டம்


ஹம்பாந்தோட்டை வீரவில நகரில் பொருத்தப்பட்டிருந்த அரச வங்கிக்கு சொந்தமான ATM இயந்திரத்தை உடைத்து பணத்தை திருடும் முயற்சி பொலிஸாரால் முறியடிக்கப்பட்டுள்ளது.


இன்று அதிகாலை 2.50 மணியளவில் பொலிஸாரினால் பொருத்தப்பட்டிருந்த அவசர சமிக்ஞை செயலிழந்த போது பொலிஸ் குழுவொன்று உடனடியாக அவ்விடத்திற்குச் சென்றுள்ளது.


அத்துடன் பொலிஸார் வருவதைக் கண்ட கொள்ளையர்கள் அவ்விடத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.


சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

No comments

Powered by Blogger.