Header Ads



90 கோடி ரூபா சேமிப்பு


வெசாக் கூடுகள் மற்றும் அதனுடன் சார்ந்த அலங்கார பொருட்களுக்காக விதிக்கப்பட்டுள்ள இறக்குமதித் தடை காரணமாக, 90 கோடி ரூபாவை சேமிக்க முடிந்துள்ளதாக, நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.


நேற்றைய தினம் -05- ருவன்வெல்ல பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர், ஊடகங்கள் மத்தியில் கருத்து வெளியிட்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.


வெசாக் கூடுகள் மற்றும் அதனுடன் சார்ந்த அலங்கார பொருட்களுக்காக விதிக்கப்பட்டுள்ள இறக்குமதித் தடை காரணமாக, நாட்டில் புதிய தொழில்வாய்ப்புகள் உருவாகியுள்ளன.


2022ஆம் ஆண்டு வெசாக் கூடுகள் மற்றும் அதனுடன் சார்ந்த அலங்கார பொருட்களுக்காக 90 கோடி ரூபா செலவிடப்பட்டது.


இந்த நிலையில், வெளிநாடுகளுக்கு செல்ல இருந்த பணத்தொகை சேமிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.