Header Ads



வைரலான வீடியோ - பொலிஸாரின் பிடியில் 5 மாணவர்கள்


இலத்திரனியல் மற்றும் சமூக ஊடகங்களில் பரவலாகப் பரப்பப்பட்ட காணொளி தொடர்பில் ஐந்து மாணவர்கள் பண்டாரவளையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.


குறிப்பிட்ட வீடியோவில், மாணவர்கள் குழு ஒன்று ஏனைய இருவரைத் தாக்குவதும், கத்தியால் காயப்படுத்த முயற்சிப்பதும் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.


குறித்த காணொளியில் காணப்பட்ட மூன்று மாணவர்கள் பண்டாரவளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.


அவர்கள் 16 மற்றும் 17 வயதுடையவர்கள் என்றும், பண்டாரவளை மற்றும் ஹல்பே ஆகிய பகுதிகளில் வசிப்பவர்களாவர்.


பொது இடத்தில் சண்டையை கண்ட மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


கைது செய்யப்பட்ட இருவரும் 16 வயதுடைய பண்டாரவளை மற்றும் தியத்தலாவை பிரதேசத்தை சேர்ந்தவர்களாவர்.


அவர்கள் இன்று பண்டாரவளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.


இது தொடர்பில் பண்டாரவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments

Powered by Blogger.