Header Ads



ரணில் கூறிய 3 விசயங்கள்


தேசிய அரசாங்கம் பற்றி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பேசவில்லை, முழு நாடாளுமன்றமும் அரசாங்கத்திற்காக வேலை செய்ய வேண்டும் என்று தான் கூறினார் என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.


'தேசிய அரசாங்கம் தொடர்பில் உங்களது நிலைப்பாடு என்ன?' என்ற கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.


அவர் மேலும் கூறுகையில், அரசாங்கத்துடன் இணைய விரும்புபவர்கள் அவர்களது கட்சியுடன் வந்து சேர முடியும் என ஜனாதிபதி கூறினார்.


அப்படி முடியாதுவிட்டால் தனியே வர முடியும் என்று அறிவித்தார். அப்படியும் முடியாதுவிட்டால் எதிர்க்கட்சியில் இருந்து கொண்டே அரசாங்கத்திற்கு வேலை செய்யலாம் என்றார்.


அதற்கான குழுக்களை நிறுவி பொறுப்புக்களைப் பகிர்ந்து கொடுப்போம் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார் என சுட்டிக்காட்டியுள்ளார்.


'உங்களது கட்சி அரசாங்கத்துடன் இணையுமா?' என்ற கேள்விக்கு மனோ கணேசன் பதிலளிக்கும் போது, "அப்படியான தீர்மானம் இல்லை" என்று கூறியுள்ளார். 

No comments

Powered by Blogger.