Header Ads



ஆயுள் தண்டனை விதிக்குமளவு 16 வயது சிறுமி செய்ய குற்றம் - STF இன் சுற்றிவளைப்பில் மாட்டினார்


ஆயுள் தண்டனை விதிக்கும் அளவுக்கு ஹெரோயின் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் 16 வயது சிறுமியை சிறப்பு அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.


நேற்று முன் தினம் (22.05.2023) மாலை மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, ​​பெதுருதுடுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கந்தியூர், புலோலி, ஹம்பசிட்டி பிரதேசத்தில் வசித்து வந்த குறித்த சிறுமி கைது செய்யப்பட்டுள்ளார்.


இதன்போது சிறுமியிடமிருந்து 05 கிராம் ஹெரோயின் மற்றும் 500 மில்லிகிராம் ஹெரோயின் பொதிகள் என்பன கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.


இதனை தொடர்ந்து சிறுமி கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக பெட்ரோடுடுவ பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.


யாழ்ப்பாணம் விசேட அதிரடிப்படை முகாமினால் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போதே குறித்த சிறுமி கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

No comments

Powered by Blogger.