Header Ads



மரிக்கார் Mp ஏற்பாடு செய்த இப்தார் - இன நல்லிணக்கம் தொடர்பில் வலியுறுத்து


கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,  ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதி தேசிய அமைப்பாளரும் ஊடகப்பேச்சாளரும், கொலன்னாவ தேர்தல் தொகுதியின் பிரதான அமைப்பாளருமான  எஸ்.எம்.மரிக்கார் ஏற்பாடு செய்த விசேட இப்தார் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (16) வெள்ளவத்தை மரேன் கிரான்ட் வரவேற்பு மண்டபத்தில் இடம் பெற்றது.


உலமாக்கள், வர்த்தகர்கள், அரசியல், சமூக, கட்சி ஆதரவாளர்கள் என இப்தார் நிகழ்வில் நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர்.


அத்துடன் இந்த இப்தார் நிகழ்வில் இன நல்லிணக்கம் தொடர்பில் உலமாக்களினால் சொற்பொழிவுகளும் ஆற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.














No comments

Powered by Blogger.