Header Ads



ரணிலையும், சஜித்தையும் இணைக்கும் மனோவின் முயற்சிக்கு நடந்தது என்ன..?


ஐக்கிய தேசியக் கட்சியையும், ஐக்கிய மக்கள் சக்தியையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வருவதற்கான கலந்துரையாடலை ஆரம்பித்துள்ளதாக தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் உறுதிப்படுத்தியுள்ளார்.


இவ்வார ஆரம்பத்தில் மனோ கணேசனும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (SLMC) தலைவர் ரவூப் ஹக்கீமும் அதிபர் ரணில் விக்ரமசிங்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் ஐக்கிய தேசியக் கட்சியையும் ஐக்கிய மக்கள் சக்தியையும் இணைக்கும் முயற்சியில் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்ததாக ஊடக அறிக்கைகள் வெளிவந்தன.


இதற்கான கலந்துரையாடலை ஆரம்பித்துள்ளதாக மனோ கணேசன் இன்று டுவிட்டர் பதிவு மூலம் உறுதிப்படுத்தியுள்ளார்.


ஆனாலும், இதன்போது பிரதமர் பதவிக்கான விடயதானம் பேசப்படவில்லை என்று அவர் மீண்டும் வலியுறுத்தினார்.


ஐக்கிய மக்கள் சக்தி பதிலளிக்கத் தவறியதால் முயற்சியை தொடர முடியவில்லை என அவர் மேலும் கூறினார்.





No comments

Powered by Blogger.