Header Ads



அவுஸ்திரேலிய பெண் இலங்கையில் உயிரிழப்பு - காரணத்தை கண்டுபிடித்த பொலிஸார்


கம்பளை ஹெம்மாத்தகம தாரா வங்குவ என்ற இடத்தில் கார் ஒன்று விபத்துக்குள்ளானதில் அவுஸ்திரேலிய சுற்றுலா பயணி ஒருவர் உயிரிழந்துள்ளார்.


இந்த விபத்தில் மரணித்த அவுஸ்திரேலிய பிரஜையின் மகளும், காரின் சாரதியும் காயமடைந்த நிலையில் கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


உயிரிழந்தவர் அவுஸ்திரேலியாவின் சிட்னியைச் சேர்ந்த 67 வயதுடைய ஒருவரென அடையாளம் காணப்பட்டுள்ளார்.


காரின் சாரதி, வத்தளை பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதுடைய பெண்ணொருவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  


சாரதிக்கு நித்திரை ஏற்பட்டதால், வாகனம் கட்டுப்பாட்டை இழந்து விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

No comments

Powered by Blogger.