Header Ads



முக்கியமான தகவல்களை திரிபுபடுத்தி, மக்களை அரசாங்கம் ஏமாற்றி வருகிறது


கடந்த செப்டம்பரில் அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) ஊழியர்கள் மட்டத்திலான ஒப்பந்தத்தை எட்டியதாகக் கூறப்பட்டதிலிருந்து,அந்த ஒப்பந்தத்தின் உள்ளடக்க விடயங்களை நாடாளுமன்றத்தில் முன்வைக்குமாறு பல சந்தர்ப்பங்களில் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தோம்.


இது தொடர்பில் சகல நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமது ஆலோசனைகளையும் முன்மொழிவுகளையும் முன்வைப்பதற்கான வாய்ப்பை வழங்குவதே இதன் நோக்கமாக அமைந்திருந்தது.


அவ்வாறு இருந்தும்,அந்த கோரிக்கைகள் எதற்கும் அரசாங்கம் செவிசாய்க்கவில்லை என்பதோடு,மார்ச் 20 ஆம் திகதி சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபையின் இறுதி அங்கீகாரம் கிட்டும் வரை பாராளுமன்றத்திற்கோ அல்லது நாட்டு மக்களுக்கோ எந்த விடயங்களையும் அறிந்து கொள்வதற்கு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.


அரசாங்கத்தின் இந்த வெளிப்படைத்தன்மையற்ற நடத்தையை வன்மையாக கண்டிப்பதோடு,முக்கியமான தகவல்களை திரிபுபடுத்தி மக்களை அரசாங்கம் ஏமாற்றி வருவதும் வருந்தத்தக்கது என குறிப்பிட்டு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நிலையியற் கட்டளை 27/2 இன் கீழ் இன்று அரசாங்கத்திடம் பல கேள்விகளை முன்வைத்தார்.


No comments

Powered by Blogger.