Header Ads



சஜித்தை பிரதமராக நியமிப்பதே சிறந்த தீர்வு, ரணில் தேசிய அரசுக்கு அழைப்பு விடுத்தால் நான் அவருடன் இணைவேன்


சஜித் பிரேமதாசவை பிரதமராக நியமிப்பதே தற்போதைய நிலைமைக்கு சிறந்த தீர்வு என சஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.


எதிர்வரும் 25ஆம் திகதி தேசிய அரசாங்கம் ஒன்றுக்காக ரணில் முன்வைக்கவுள்ள பிரேரணை சரியான பயணத்திற்கு சரியான முறையில் முன்வைக்கப்பட்டால் தாம் தனித்து அல்லது அதனுடன் இணைந்து நிற்பேன் எனவும் அவர் குறிப்பிட்டார்.


நாட்டின் நலனுக்காக இந்த தருணத்தில் கட்சி அரசியலுக்கு பதிலாக மக்கள் அரசியலுக்கு செல்ல வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தொலைக்காட்சி ஒன்றுடனான கலந்துரையாடலின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

No comments

Powered by Blogger.