Header Ads



மகனின் தாக்குதலில் தந்தை உயிரிழப்பு, தாய் படுகாயம்


கிளிநொச்சி - தருமபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் தந்தை ஒருவர் மகனின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


இந்த சம்பவம் நேற்று (18.04.2023) நடந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


தருமபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் பிச்சைமுத்து இராமசாமி (66 வயது) என்பவரே தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளார்.


தந்தை, தாய் மற்றும் மகனுக்கு இடையில் ஏற்பட்ட கைகளப்பு காரணமாக மகனால் தாக்கப்பட்ட தந்தை படுகாயம் அடைந்த நிலையில் தருமபுரம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது இடைநடுவே உயிரிழந்துள்ளார்.


தாயார் படுகாயமடைந்த நிலையில் மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.


இந்நிலையில் இறத்த தந்தையில் சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.


இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.