Header Ads



வீரவன்சவிடம் இருந்து வந்துள்ள எச்சரிக்கை


"அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதற்கான அமைச்சரவை உப குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது.இதனைக் கைவிட வேண்டும்.


அதனையும் மீறி 13 ஆவது திருத்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டால் இந்த நாட்டின் வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத இனக்கலவரம் வெடிக்கும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.


நல்லிணகத்தை 3 கட்டங்களாக ஏற்படுத்துவதற்காக அமைச்சரவை உபகுழு நியமிக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்திருந்தார்.


அதில், 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதும் உள்ளடங்குகின்றது என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.


No comments

Powered by Blogger.