Header Ads



தீயில் சிக்கி எரிந்து நாசமான பட்டாசு கடை


கிரியுல்ல பிரதேசத்தில் தற்காலிகமாக நிர்மாணிக்கப்பட்ட பட்டாசு கடை ஒன்றில் தீ பரவியுள்ளது.


நேற்றிரவு தீ பரவியதாகவும், கிரியுல்ல பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகளின் தலையீட்டினால் தீ அணைக்கப்பட்டதாகவும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.


தீ விபத்தால் கடையில் இருந்த பட்டாசுகள் அனைத்தும் எரிந்து நாசமானது.


இந்த தீ விபத்தில் இருபுறமும் உள்ள இரண்டு கடைகளின் சொத்துக்களும் சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


தீ விபத்தில் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என்பதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிரிஉல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments

Powered by Blogger.