Header Ads



நாட்டில் உள்ள சுனாமி கோபுரங்கள் குறித்து, வெளியான பரிதாப தகவல்கள்


சுனாமி எச்சரிக்கைக்காக கட்டப்பட்ட சுனாமி கோபுரங்களில் 40% செயல்படவில்லை என தெரியவந்துள்ளது.


சுனாமி பற்றி எச்சரிப்பதற்காக 77 சுனாமி கோபுரங்கள் நாடு முழுவதும் அரசு பேரிடர் மேலாண்மை துறைகளால் நிறுவப்பட்டுள்ளன.


இந்த சுனாமி கோபுரங்கள் தற்போது 15 வருடங்கள் பழமையானவை என அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் (ஓய்வு பெற்ற) சுதந்த ரணசிங்க தெரிவித்துள்ளார். .


இந்த கோபுரங்கள் பல இயங்கவில்லை என்றும், சுனாமி கோபுரங்களுடன் இணைக்கப்பட்ட செயற்கைக்கோள் அமைப்பும் செயல்படவில்லை என்றும் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.


வேலை செய்யாத சுனாமி கோபுரங்களை கையால் இயக்கக்கூடிய வகையில் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டார்.


சுனாமி அபாயம் ஏற்படும் போது சுனாமி கோபுரங்கள் மூலம் மட்டும் மக்களுக்குத் தெரிவிக்க முடியாது என்றார்.


இதன் காரணமாக கையடக்கத் தொலைபேசிகள், ஊடகங்கள், பிரதேச செயலாளர்கள் அலுவலகங்கள், ஒலிபெருக்கிகள், வழிபாட்டுத் தலங்களில் உள்ள மணிகள் போன்றவற்றைப் பயன்படுத்தி சுனாமி எச்சரிக்கை அமைப்பு பின்பற்றப்படும் என்றார்.

No comments

Powered by Blogger.