Header Ads



பூறு முனா தப்பிச்செல்ல உதவிய  ஏழு பேரில் மூவர் கடும் நிபந்தனையில் பிணை


- Ismathul Rahuman -


பூறு முனா எனும் கோரலே கங்கானம்லாகே ரவிந்து வர்னரங்க எனும் திட்டமிட்ட குற்றச் செயலில் ஈடுபட்டவர் கட்டுநாயக்க பொலிஸ் நிலையத்தில் தடுத்து வத்திருந்த போது, தப்பிச்செல்ல உடைந்தாயாக இருந்த குற்றத்திற்காக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த  ஏழு பேரில் மூவர் கடும் நிபந்தனையில் பிணையில் விடுவிக்கப்பட்டதுடன் நால்வர் தொடர்ந்தும் 11 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.


    சந்தேக நபர் தப்பிச்செல்ல உடந்தையாக இருந்தமை,போக்குவரத்து வசதி செய்துகொடுத்தமை,  அடைக்களம் கொடுத்து மறைத்து வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.


  இவர்களின் வழக்கு விசாரண மீண்டும் நீர்கொழும்பு பிரதான நீவதான் சம்பிக்க ராஜபக்ஷ முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது ஹெட்டிபொல,ரிட்டாதெனிய,ஜயலங்கா தகம் நிகேதனயைச் சேர்ந்த 48 வயதான பொத்தேவெள இந்திரசார தேரர், 52 வயதான ஹெவரதீ திவுல்வெவே தீபானந்த தேரர் மற்றும் கார் சாரதியான கபுருகம,கழுபோவிடியன, அபேவெள, மண்டத்தரகந்தயைச் சேர்ந்த 28 வயதான வீரசிங்க ஆரச்சிலாகே திலான் பெதும் பிரபாத் ஆகியோரை தலா 15 ஆயிரம் ரூபா ரொக்கப் பிணையிலும் 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணையிலும் செல்ல அனுமதித்த நீதவான் இவர்களின் வெளிநாட்டு பயணத்திற்கு தடை விதித்ததுடன் மாதத்தின் முதலாம், நான்காம் வார ஞாயிற்றுக்கிழமைகளில் கட்டுநாயக்க பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாகுமாறும் உத்தரவிட்டார்.


  இவர்களுக்கு எதிராக குடிவரவு,குடிஅகல்வு சட்டத்தின் கீழ் தொடுக்க்கப்பட்ட முறைப்பாட்டை கடந்த தவனையில் பொலிஸார் மீழப் பெற்றுக்கொண்டதாக மன்றில் தெரிவிக்கப்பட்டது. 


 கடுவெள்லேகமயைச் சேர்ந்த சுரேஷ் புஷ்பகுமார, கதிரான,தெமன்ஹந்தியைச் சேர்ந்த சதருவன் சன்ஜீவ, மிணுவன்கொட ,மன்சில்கொடயைச் சேர்ந்த மன்ஜுல ஜயவர்தன, கட்டுவ பள்ளன்சேனையைச் சேர்ந்த என்டன் ஜயசங்க பிரனான்து ஆகியோர்களை இடம் மாதம் 11 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீவவதவான் ராஜபக்ஷ உத்தரவிட்டார்.


   சந்தேகநபர்கள் சார்பாக சட்டதரணிகள் தந்த நிரன்ஜன, யசஸ் பிரவீன் சோவிஸ்,மனேஸ் வெவிட ஆகியோர் ஆஜரானதோடு கட்டுநாயக்க பொலிஸ் நிலைய பொலிஸ் பரிசோதகர் முதன்நாயக்க வழக்கை நெறிப்படுத்தினார்

No comments

Powered by Blogger.