Header Ads



ஒரு குரங்கை 75,000 கொடுத்து சாப்பிட, அந்த மக்களுக்கு என்ன பைத்தியமா..?


குரங்குகளை பிடிப்பதற்கு சம்பந்தப்பட்ட நிறுவனம் தோராயமாக 20,000 முதல் 25,000 ரூபா வரை செலவிட வேண்டியிருக்கும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.


சீனாவுக்கு குரங்குகளை அனுப்புவது தொடர்பில் நாட்டில் இடம்பெற்று வரும் சர்ச்சைக்குரிய பேச்சுக்கள் தொடர்பில் “என்ன நடந்தது” நிகழ்ச்சியில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


மேலும் பேசிய விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர,


“இந்த திட்டம் சீன நிறுவனம் ஒன்றிடம் இருந்து எமக்கு வந்துள்ளது. எங்களுக்கு கிடைத்த தகவல்களை அமைச்சரவையில் தெரிவிப்போம். இதை செயல்படுத்துவது குறித்து துணைக்குழுவின் ஆய்வுக்கு பிறகு முடிவு செய்யப்படும். சீனாவில் உள்ள 1000க்கும் அதிகமான உயிரியல் பூங்காக்களுக்கு வழங்க இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. "அவர்கள் இதனை உடனடியாக செயல்படுத்தத் தயாராக இருக்கிறார்கள். அடுத்த மாதம் சுமார் 1000 குரங்குகளை கொண்டு செல்ல அனுமதி கேட்டார்கள். ஆனால் அப்படி அனுமதி கொடுக்க முடியாது. ஒரு குரங்கிற்கு 20 ஆயிரம் ரூபாய் முதல் 25 ஆயிரம் ரூபாய் வரை அவர்கள் செலவிட வேண்டி ஏற்படும். விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய கூண்டு வகை உள்ளது என்று ஏற்கனவே கூறியுள்ளனர். இந்த சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலைப்பட்டு பேசினாலும் இறைச்சிக்கு விலங்குகளை அனுப்ப மாட்டோம். ஒரு குரங்கை 50,000 அல்லது 75,000 கொடுத்து சாப்பிட அந்த மக்களுக்கு என்ன பைத்தியமா?"

1 comment:

  1. குரங்குச் சமாச்சாரத்தில் மக்களின் கவனத்தைத் திருப்ப குரங்குச் சேட்டைகளயைும் இந்த மந்தி(ரி)கள் ஆரம்பித்து விட்டார்கள். குரங்கு விற்பனையும் அதற்கு பாராளுமன்ற அங்கீகாரமும் என ஒரு பாராளுமன்ற அமர்வை நடாத்தி ஒருநாளையே வீணாக்கினால் அதற்காக பொதுமக்களுடைய பணத்திலிருந்து ஒரு கோடி ரூபாவை அதற்கு செலவு செய்ய வேணடும். அதன் நன்மை என்ன? குரங்குக் கதை பேசியது மட்டும்தான். அங்கே சீன தூதரகம் ' நாங்களோ எங்கள் அரசாங்கமோ குரங்கு இறக்குமதி தொடர்பாக எந்தப் பேச்சுகளிலும் ஈடுபடவில்லை எனக்கூறும் போது இலங்கைப் பாராளுமன்றம் குரங்குகளை சீனாவுக்கு ஏற்றுமதி செய்ய பாராளுமன்ற அங்கீகாரத்தை கோரியிருப்பதாக கபினட் அமைச்சர் ஒருவர் பகிரங்கமாகத் தெரிவித்தார். என்ன கேவலம் கெட்ட குரங்குகள் இந்த நாட்டுமக்களைப் பிரதிநிதித்துவப்படுத்து கின்றார்கள் என்பது தான் இன்னமும் புரியாக புதிராக இருக்கின்றது.

    ReplyDelete

Powered by Blogger.