Header Ads



36 வயது, வைத்தியர் சடலமாக மீட்பு


நுவரெலியா - உடமாதுர பிரதேச ஆயுர்வேத வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவர் அவரது உத்தியோகபூர்வ இல்லத்தின் குளியலறையில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.


இந்த சம்பவம் நேற்று (17.04.2023) பதிவாகியுள்ளது.


இந்த சம்பவத்தில் மதுசங்க ஜயசூரிய (36 வயது) என்பவரே உயிரிழந்துள்ளார்.


உடமதுர ஆயுர்வேத வைத்தியசாலையில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் நேற்று (17) காலை உத்தியோகபூர்வ இல்லத்தின் குளியலறைக்குச் சென்றபோது குறித்த வைத்தியர் உயிரிழந்து காணப்பட்டமை தொடர்பில் தெரிபஹ பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.


இதனைதொடர்ந்து தெரிபஹ பொலிஸார் ஆயுர்வேத வைத்தியசாலைக்கு சென்று சடலத்தை மீட்டுள்ளனர்.


இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.