Header Ads



ஆசிரியர்களுக்கு 3000 வழங்க அனுமதி அளித்தேன், திறைசேரி மறுத்தது - தேவைப்பட்டால் அமைச்சுப் பதவியை விடத் தயார்


தேவைப்பட்டால் தனது அமைச்சுப் பதவியை விட்டுக் கொடுக்கவும் தயார் என அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார். 


சிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போது அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 


மேலும், அழுத்தங்களுக்கு உட்பட்டு அமைச்சராக பணியாற்ற தயாராக இல்லை என்றும் அவர் கூறினார்.  


உயர்தரப் பரீட்சைக்குரிய விடைத்தாள்களை திருத்தும் ஆசிரியர்களுக்கு மூவாயிரம் ரூபா வழங்குவதற்கு தாம் அனுமதி அளித்ததாகவும் எனினும் திறைசேரி அதற்கு அனுமதி வழங்கவில்லை என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.


 

No comments

Powered by Blogger.