Header Ads



ஈஸ்டர் தாக்குதல் நடந்த 21ம் தேதி, பாரிய மக்கள் கூட்டத்தில் இணையுமாறு மெல்கம் ரஞ்ஜித் அழைப்பு


ஈஸ்டர் தாக்குதலுக்கான உண்மை மற்றும் நியாயத்தை கோரி, எதிர்வரும் 21ம் தேதி வலுவான மக்கள் கூட்டமொன்றை கூட்டுவதற்கு கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்ஜித் பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார்.


கொழும்பில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்து, அவர் இந்த அழைப்பை விடுத்தார்.


இன, மத வேறுபாடின்றி, அனைத்து மக்களையும் இந்த மக்கள் கூட்டத்தில் இணைந்துக்கொள்ளுமாறு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.


ஈஸ்டர் தாக்குதல் நடத்தப்பட்ட 21ம் தேதி பாரிய மக்கள் கூட்டமொன்றை இணையுமாறு காழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்ஜித் அழைப்பு விடுத்துள்ளார் இதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் எவ்வாறு காணப்படும் என்பது தொடர்பிலும் பிபிசி தமிழ், போலீஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட போலீஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவவிடம் வினவியது.


கத்தோலிக்க மக்கள் இருக்கின்ற மற்றும் இந்த மக்கள் கூட்டம் கூடுகின்ற பகுதிகளில் அந்த பகுதிக்கு பொறுப்பாக உயர் போலீஸ் அதிகாரியின் தீர்மானங்களுக்கு அமைய, பாதுகாப்பு வழங்கப்படும் என போலீஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.

No comments

Powered by Blogger.