Header Ads



சபாநாயகரின் டபள் கேம் - சீறிப் பாய்ந்த பெண் Mp


பெண் என்ற அடிப்படையில் , சபையில் அசௌகரியத்துக்கு உள்ளாகும்போது , அது தொடர்பில் சபாநாயகரின் செயற்பாடு குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி குமாரி கவிரத்ன இன்று -07- சபையில் கேள்வி எழுப்பினார் .


 நாடாளுமன்றில் இன்று சிறப்புரிமை பிரச்சினையை எழுப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி குமாரி கவிரத்ன , ப்ரேம்நாத் சீ.தொலவத்தவின் சிறப்புரிமை பிரச்சினை கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்டதாக தெரிவித்தார் . ஆனால் , சபை முதல்வர் தகாத வார்த்தைகளால் தூற்றியதன் மூலம் , தமது சிறப்புரிமை மீறப்பட்டதாக , சம்பவம் இடம்பெற்ற தினத்தன்று உங்களிடம் முறைப்பாடு செய்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி குமாரி கவிரத்ன சபாநாயகரின் கவனத்துக்கு கொண்டு சென்றார் . 


ஆனால் , இன்றைய தினம் , தமது சிறப்புரிமை பிரச்சினையை இந்த இடத்தில் முன்வைக்க இடமளிக்காமல் , நாடாளுமன்ற உறுப்பினர் தொலவத்தவுக்கு எவ்வாறு முன்னுரிமை அளிக்கப்பட்டது ? உங்களது இந்த நடவடிக்கை என்ன ?


 கடந்த முறை , நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி தம்மை சபையில் அசௌகரியத்துக்கு உள்ளாக்கிய சம்பவம் தொடர்பான கடிதத்தைக்கூட நீங்கள் சிறப்புரிமை குழுவுக்கு அனுப்பவில்லை . 


உங்களது இரட்டை வேடம் என்ன என்று நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி குமாரி கவிரத்ன சபாநாயகரிடம் வினவினார் . பெண் என்ற அடிப்படையில் , இங்கு அசௌகரியத்துக்கு உள்ளாகும்போது , இதனைவிடவும் பொறுப்புடன் செயற்பட உங்களுக்கு பொறுப்பு உள்ளதுதானே ! s என்ன நடந்தது என்பதை நீங்கள் கூறுங்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி குமாரி கவிரத்ன சபாநாயகரிடம் தொடர்ந்தும் வினவினார் . 


இதற்குப் பதிலளித்த சபாநாயகர் , இந்த சபையின் ஒழுங்குப் பத்திரத்தில் உள்ளடங்கியுள்ள உள்ளடக்கப்படவில்லை என்றும் கூறினார் . பிரேரணைகளை முன்வைக்க வாய்ப்பளிப்பதாகவும் , உங்களின் யோசனை ஒழுங்குப் பத்திரத்தில் என்ன நடந்தது என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்றும் சபாநாயகர் தெரிவித்தார் .

1 comment:

  1. நாடு பணமின்றி இக்கட்டான நிலையில் தவிர்க்கும் போதும் இந்த நாட்டு மக்களின் 90 இலட்சம் ரூபாவைச் செலவழித்து 225 பேரும் பாராளுமன்ற சிறப்புரிமையைப் பேசுவதை உடனடியாக நிறுத்த வேண்டும். மக்கள் எதிர்நோக்கும் நெருக்கடியிலிருந்து அவர்களை விடுவிக்க உடனடியாகத் தீர்மானங்கள் எடுக்கப்பட்டு அவை அவ்வப்போது நடைமுறைப்படுத்தி மக்களின் நெருக்கடியை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். எடுத்த கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் பிள்ளைகளைக் கொலை செய்து பெற்றோரும் உயிரை மாய்த்துக் கொள்ளும் நிலை, மருந்து வாங்க பணமின்றி பிள்ளைகளைக் கொலை செய்து விட்டு தாமும் கொலை செய்ய முயற்சி செய்யும் தாய்மார்கள் என இலங்கையின் அவலமும் நெருக்கடியும் நீண்டு செல்கின்றது. கர்வம் பிடித்த இபோச பஸ்சாரதிகளின் ஓட்டம் காரணமாக பிரயாணம் செய்யும் பயணிகள் மரணத்தை எதிர்நோக்க வேண்டிய நிலைமை. நேற்றைய கனேதன்ன பஸ்விபத்தைப் பாருங்கள் இது போன்று பொதுமக்களும் பொறுப்பான அரச ஊழியர்களும் மிக மோசமான செயல்களில் ஈடுபடும் போது அதுபற்றி கலந்துரையாடி அவற்றுக்குத் தீர்வு காணுவதைவிட்டு விட்டு 225 பேரும் தமது ஈகோவை நிலைநிறுத்துவதை உடனடியாக நிறுத்த வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.