Header Ads



கொரோனாவை இப்படியும் அழிக்க முடியும் - ஆஸ்திரேலிய ஆய்வாளர்கள் கண்டறிந்தனர்


சிலிக்கான், தாமிரம் மற்றும் தங்கம் போன்றவை கொரோனா வைரசை எதிர்த்து போராட உதவும் என ஆஸ்திரேலிய ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். கெமிக்கல் சயின்ஸ் இதழில் வெளியிடப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொடர்பான ஆய்வு முடிவு குறித்து, ஆய்வின் முக்கிய ஆய்வாளரான ஆஸ்திரலேிய கர்டின் பல்கலையின் நதிம் டர்விஸ் கூறியதாவது,


கொரோனா வைரஸ்கள் அவற்றின் விளிம்பில் உள்ள ஸ்பைக் புரதங்கள் மூலமாக மனித உயிரணுக்களில் நுழைந்து பாதிக்கின்றன.


இந்த புரதங்கள், சிலிக்கான், தங்கம், தாமிரத்தின் மேற்பரப்பில் ஓர் வலுவான வேதியியல் பிணைப்பை உருவாக்கும் எதிர்வினை மூலம் ஒட்டிக் கொள்ளும் தன்மையை கொண்டுள்ளன. 


எனவே ஏர் ஃபில்டர் போன்றவற்றிலும், பெஞ்ச், டேபிள்கள் மற்றும் சுவர்களுக்கான பூச்சாகவும் அல்லது துடைக்கும் துணியிலும், சிலிக்கான், தாமிரம், தங்கத்தை பயன்படுத்துவதன் மூலம் கொரோனா வைரஸ் பலருக்கும் பரவுவதை தடுக்க முடியும். மேலும், மின்சாரத்தின் மூலம் கொரோனா வைரசை அழிக்க முடியும் என்றும் ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஏர் ஃபில்டர்களில் மின்புலங்களை இணைப்பதன் மூலம், வைரசை செயலிழக்க செய்ய முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments

Powered by Blogger.