Header Ads



இது எத்தனை முஸ்லிம்களுக்கு தெரியும்..? அல் குர்ஆனை ஆதாரம் காட்டி தீபிஹா உடகம சுட்டிக்காட்டிய விடயம்


ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் ஏற்பாட்டில் ஓழுங்கு செய்யப்பட்ட  சர்வதேச பெண்கள் தின நிகழ்வு கொழும்பு 7-லக்ஷ்மன் கதிர்காமர் நிலையத்தில் முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவி புர்ஹான் பீபி இப்திக்கார் தலைமையில் நடைபெற்றது.


இந் நிகழ்வு  "கிழக்கு மற்றும் மேற்கில் பெண்களின்  உரிமைகளும் ,மதிப்புக்களும்" எனும் தொனிப்பொருளில் நடைபெற்றது.  இந் நிகழ்வில் மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் தலைவி  கலாநிதி  தீபிஹா உடகம,   சட்டத்தரணி சிவஸ்திகார அருலிங்கம், ஈரான் நாட்டில் இருந்து வருகை தந்த தெஹ்ரான் பெண்கள் கல்வி பற்றிய கலாநிதி ஸ்ஹேரேஹ் மிப்ராஜி, கொழும்பு பொது வைத்தியசாலையின் சிரேஸ்ட வைத்திய அதிகாரி  நசிகா அமீர் ஆகியோர்கள் தமது கருத்துக்களை முன் வைத்தனர்


மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவி தீபிஹா உடகம இங்கு உரைநிகழ்த்துகையில் - 


அல் குர்ஆனில் சூறா நிசாவில் பெண்களுக்கான உரிமை பற்றி மிகத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.  சகல உரிமைகளும் பெண்களுக்கும் உண்டு. இது எத்தனை முஸ்லிம்களுக்கு தெரியுமே தெரியாது. 


 எனது சட்டக்கல்லுாரியின் சட்டம் பயிலும்  வகுப்பில் 95 வீதமானவர்கள் பெண் மாணவிகள் உள்ளனர் ஆனால்  ஆண்கள் 5வீதம் மட்டுமே  உள்ளார்கள்.  ஆனால் பொறியியல் பீடம், கனனி தொழில்நுட்ப பிரிவில் ஆண்கள் 75வீதமும் பெண்கள் 25வீதமே உள்ளனர். 


உலகில் உள்ள சகல மதங்களும் பெண்களுக்கான உரிமைகளை  சமமாக வழங்கியுள்ளது. ஆனால் மதங்களை நாம் அரசியல்மயப்படுத்தியுள்ளோம்.  இலங்கை அரசியலமைப்பில் உள்ளுராட்சித் தேர்தலின்போது கட்டாயம் 25வீதம் பெண் உறுப்பிணர்கள் இருத்தல் வேண்டும்.எனச் சொல்லியிருக்கின்றது.   


ஆனால் அரசியலமைப்பினை  உருவாக்கும் ஆணைக்குழுவில், அமைப்புக்ளில் பெண்கள் அங்கத்தவர்களாக அதில் இல்லை. பெணகளுக்கு  தொழில் , சுகாதாரம் ,கல்வி, பாதுகாப்பு, போன்ற சகல   உரிமைகளும் ஆண்களுக்கு  உள்ளது  போன்றே சமமாக உள்ளது. இலங்கையில் பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமையை பிரித்தாணியர் ஆட்சிக்கலாத்திலேயே 1931ல் வழங்கப்பட்டுள்ளது ஆனால் இலங்கையில் தற்பொழுது  52 வீதத்திற்கும் அதிகமான பெண்கள் உள்ளனர்.  தீபிஹா உடகம உரையாற்றினார்.


எக்ஸ்பிரஸ் நியுஸ் -ஆங்கில பத்திரிகையின் பிரதம ஆசிரியை ஹனா இப்ராஹிம்  இந் நிகழ்வினை நெறிப்படு்த்தினார். அத்துடன் வரவேற்புரையை மீடியாபோரத்தின் செயலாளர் சிஹார் அனீஸ்,  மீடியா போரத்தின் ஆலோசகர் என்.எம். அமீன் ஆகியோறும் உரை நிகழ்த்தினார்கள்.  


இந் நிகழ்வின்போது  முஸ்லிம் பெண்கள் கலை ,கலாச்சாரம், மற்றும் முஸ்லிம் பெண்களின் உரிமைகள் பற்றி இஸ்லாம் மதத்தில்  வழங்கப்பட்டுள்ள சகல உரிமைகள், பெண்கள் இஸ்லாமிய வாழ்க்கை முறையில் எவ்வாறு வாழ வேண்டும் என சொல்லியிருக்கின்றது. இஸ்லாம் மார்க்க்மே பெண்களுக்கு சகல உரிமைகளையும் வழங்கியுள்ளது . எனவும் டாக்ர் நசிஹா அமீர் உரை நிகழ்த்தினார்.. 


(அஷ்ரப் ஏ சமத்)

No comments

Powered by Blogger.