Header Ads



மரத்தில் ஏறி பிக்கு உண்ணாவிரதம் - அவர் முன்வைத்துள்ள கோரிக்கை


பண்டுவஸ்நுவர தேரர் ஒருவர், தனக்கு விகாரையின் தலைமைப் பொறுப்பை வழங்குமாறு கோரி மரத்தில் ஏறி உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார்.


மல்வத்து – அஸ்கிரிய தரப்பினர் விகாராதிபதி தேரர் காலமானதையடுத்து, அவரது சிரேஷ்ட சீடருக்கு விகாராதிபதி பதவியை வழங்கியமைக்கு எதிராகவே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டதாக பண்டுவஸ்நுவர பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


சிலாபம்- குருநாகல் பிரதான வீதியிலுள்ள மரத்தில் ஏறி குறித்த தேரர் இந்த உண்ணாவிரதத்தை மேற்கொண்டுள்ளார்.


உண்ணாவிரதம் இருக்கும் தேரரின் செயற்பாடுகள் சரியில்லை என பொலிஸாருக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ள நிலையில், ஆலயத்தின் பாதுகாப்புக்காக ஏற்கனவே பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

No comments

Powered by Blogger.