Header Ads



முஜீப் வீழ்ந்தாரா..? வீழ்த்தப்பட்டாரா..??


- எஸ்.என்.எம்.சுஹைல் -

முஸ்லிம் சமூ­கத்தின் பிரச்­சி­னைகள் தொடர்பில் பாரா­ளு­மன்­றத்தின் கவ­னத்­துக்கு கொண்­டு­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களில் கடந்த 7 வரு­டங்­க­ளாக முஜிபுர் ரஹ்­மானின் பங்­க­ளிப்பு அளப்­ப­ரி­யது என கூறினால் அது பிழை­யா­காது. அவரின் பாரா­ளு­மன்ற நட­வ­டிக்­கை­களை ஏனைய முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­ப­னர்­களின் நட­வ­டிக்­கை­க­ளோடு ஒப்­பிட்டு பார்க்­கும்­போது இதனை இல­கு­வாக புரிந்­து­கொள்ள முடியும்.

1990 ஆம் ஆண்­டு ­முதல் அர­சியல் செயற்­பா­டு­களில் ஈடு­படும் முஜீப் 2009 ஆம் ஆண்டு மாகாண சபை தேர்­தலில் வெற்­றி­பெற்று பிர­தி­நி­தித்­துவ அர­சி­யலில் தடம்­ப­தித்தார். இரண்டு தடவை மேல்­மா­காண சபை உறுப்­பி­ன­ரா­கவும் இரண்டு தடவை பாரா­ளு­மன்ற உறுப்­பி­னராகவும் இருந்த அவர் முஸ்லிம் சமூ­கத்தின் உரி­மைகள் விட­யத்தில் போராடி குரல் கொடுத்து மிகக் காத்­தி­ர­மான பங்­க­ளிப்பை நல்­கி­யுள்ளார்.


மேலும், பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களின் சபை செயற்­பா­டு­களை மையப்­ப­டுத்தி manthri.lk இணை­யத்­தளம் மேற்­கொள்ளும் தரப்­ப­டுத்­தலின் அடிப்­ப­டையில் 2015 தொடக்கம் 2020 வரை­யி­லான 8 ஆவது பாரா­ளு­மன்­றத்தில் இவர் 23 ஆவது இடத்தை பெற்­றி­ருந்தார். முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களில் இவரே முதன்மை இடத்தை பெற்­றி­ருந்தார். 414 சபைக் அமர்வு­களில் இவர் தான் கூடு­த­லான கூட்­டத்தில் பங்­கு­பற்­றி­யி­ருந்தார். அந்­த­வ­கையில், 398 கூட்­டங்­களில் பங்­கேற்­றி­ருந்தார்.


2020 ஆகஸ்ட் தொடக்கம் 2022 ஒக்­டோபர் வரை 9 ஆவது பாரா­ளு­மன்­றத்தில் உறுப்­பி­ன­ராக பதவி வகித்த முஜிபுர் ரஹ்மான் 12 ஆவது இடத்தில் தரப்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கிறார். 204 கூட்­டங்­களில் 196 இல் அவர் கலந்­து­கொண்­டுள்ளார். கொரோனா தொற்­றுக்­குள்­ளான இவர் சில­காலம் தனி­மைப்­ப­டுத்­தப்­பட்­ட­மையால் சபை அமர்­வு­களில் பங்­கேற்க முடி­யாமல் போன­தையும் இங்கு நினை­வூட்­டலாம். இம்­மு­றையும் முஸ்லிம் உறுப்­பி­னர்­களில் இவரே முதலாம் நிலையில் இருக்­கின்றார். (வரவு செலவு திட்ட உரையில் அவர் பங்­கு­பற்­றி­யி­ருந்தார். அவ்­வி­ட­யங்கள் இன்னும் உள்­வாங்­கப்­ப­டாத நிலையில் இந்த தரவு வெளி­யா­கி­யி­ருந்­தது)


அத்­தோடு, அரச நிர்­வாகம், பாரா­ளு­மன்ற விவ­காரம், நிதி, பொரு­ளா­தாரம், நீதி, பாது­காப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு விவ­கா­ரங்­களில் இவர் கூடு­தலான அக்­க­றை­யுடன் செயற்­பட்­டி­ருப்­பதை புள்­ளி­வி­ப­ரங்கள் சுட்­டிக்­காட்­டு­கின்­றன.


மாறு­பட்ட அர­சியல் நிலை­மைகள் உரு­வா­கி­யுள்ள நிலையில் உள்­ளூ­ராட்சி மன்ற தேர்தல் ஒன்­றுக்­கான அறி­விப்பு வெளி­யா­ன­தை­ய­டுத்து கொழும்பு மாந­கர சபையை எவ்­வா­றா­யினும் கைப்­பற்­றி­யாக வேண்டும் என்ற நிலை­மையில் ஐக்­கிய மக்கள் சக்தி, தற்­போ­தைய சூழ்­நி­லையில் முஜிபுர் ரஹ்­மானால் மாத்­தி­ரமே கொழும்பை வெற்­றி­கொள்ள முடியும் என தீர்­மா­னித்­தது.


பீ.டீ.சிறி­சேன மைதா­னத்தில் கடந்த ஆண்டு இறு­தியில் இடம்­பெற்ற அக்­கட்­சியின் கூட்­ட­மொன்றில் குரு­நாகல் மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் நளீன் பண்­டார கொழும்பு மாந­கர மேயர் வேட்­பா­ள­ராக முஜிபுர் ரஹ்மான் கள­மி­றக்­கப்­பட வேண்டும் என்­பதை வலி­யு­றுத்­தினார்.


உள்­ளூ­ராட்சி தேர்­த­லுக்­கான அறி­விப்பு வெளி­யா­ன­தை­ய­டுத்து ஐ.ம.ச. வேட்­பாளர் தேர்வில் கள­மி­றங்­கி­யது. இந்­நி­லையில், கொழும்பு மாந­கர வேட்­பாளர் விவ­காரம் சூடு­பி­டிக்க அதே நளீன் பண்­டார மீண்டும் முஜிபுர் ரஹ்­மானின் பெயரை பிரே­ரித்தார். இந்­நி­லையில் கட்சி ஏக­ம­ன­தாக முஜிபுர் ரஹ்­மானை மேயர் வேட்­பா­ள­ராக அறி­வித்­தது. இத­னை­ய­டுத்து கடந்த ஜன­வரி மாதம் 20 ஆம் திகதி அவர் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பத­வியை இரா­ஜி­னாமா செய்தார்.


இந்­நி­லையில் உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்தல் கால­வ­ரை­ய­றை­யின்றி ஒத்­தி­வைக்­கப்­பட்­ட­மை­யா­னது முஜிபுர் ரஹ்­மானின் பிர­தி­நி­தித்­துவ அர­சி­ய­லுக்கு முட்­டுக்­கட்டை போட்­டுள்ளது.


ஏற்­க­னவே, 1990 ஆம் ஆண்டு முதல் 2004 ஆம் ஆண்­டு­வரை இடம்­பெற்ற தேர்­தல்­களில் முஸ்லிம் ஐக்­கிய விடு­தலை முன்­னணி, பொது­ஜன முன்­னணி என்­ப­வற்றில் தேர்­தலில் கள­மி­றங்­கிய அவரால் வெற்­றி­பெற முடி­ய­வில்லை.


2007 ஆம் ஆண்டு உள்­ளூ­ராட்சி தேர்­தலின் போது ஐக்­கிய தேசியக் கட்­சியில் உள்­வாங்­கப்­பட்டு கொழும்பு மாந­கர சபை தேர்தல் வேட்­பாளர் பட்­டி­யலில் முஜீப் இடம்­பிடித்தார். அவரின் துர­திஷ்­டமோ, என்­னவோ குறித்த வேட்பு மனு நிரா­க­ரிக்­கப்­பட்­டது. மீண்டும் அவர் கொழும்பு மாந­கர சபை தேர்தல் வேட்­பாளர் பட்­டி­யலில் உள்­வாங்­கப்­பட்ட நிலையில் தேர்தல் ஒத்­தி­வைக்­கப்­பட்­டி­ருக்­கி­றது.


பாரா­ளு­மன்­றத்தில் முஸ்லிம் சமூ­கத்தை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தி முஜிபுர் கட்­டாயம் இருக்க வேண்டும் என்று சமூக மட்­டத்தில் வலி­யு­றுத்­தப்­பட்டு வரும் நிலையில், அவரை திட்­ட­மிட்டு கொழும்பு மாந­க­ருக்குள் முடக்­கும் திட்டம் அரங்­கேற்­றப்­பட்­டி­ருக்­கலாம் என்ற சந்­தேகம் அர­சியல் விமர்­ச­கர்கள் மத்­தியில் இருக்­கத்தான் செய்­கி­றது.


காரணம் முஸ்லிம் அர­சியல் அரங்கு மாத்­தி­ர­மன்றி, கொழும்பு அர­சி­ய­லிலும் தேசிய அர­சி­ய­லிலும் முஜிபுர் ரஹ்மான் சிறந்த அர­சியல் தலை­மை­யாக நோக்­கப்­பட்டு வந்தார். முஸ்­லிம்கள் மத்­தியில் மட்­டு­மன்றி தமி­ழர்கள், சிங்­க­ள­வர்கள் மத்­தி­யிலும் முஜிபுர் ரஹ்மான் பிர­ப­ல­ம­டைந்­தி­ருந்தார். இவரின் அசுர வளர்ச்சி கட்சி உள்­மட்­டத்தில் புகைச்­சலை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்க வாய்ப்பு இருக்­கி­றது. எனவே, அவர் திட்­ட­மி­டப்­பட்டு இவ்­வாறு கொழும்பு மாந­கர வேட்­பா­ள­ராக கள­மி­றக்கும் சதிகள் அரங்­கேற்­றப்­பட்­டி­ருக்­கலாம் எனும் சந்­தேகம் எழத்தான் செய்­கி­றது.


இது இப்­ப­டி­யி­ருக்க, கொழும்பு மாந­கர மேயர் பதவி அமைச்­ச­ரவை அந்­தஸ்­துள்ள அமைச்­சரின் பத­வியை விட அதி­கா­ர­மிக்­கது. இதனால், கொழும்பு மேயர் பதவி பலரின் இலக்­காக இருந்­தது. ஐக்­கிய மக்கள் சக்­திக்குள் இருக்கும் பிர­பல முஸ்லிம் அர­சி­யல்­வா­தி­யொ­ருவர் குறித்த பத­வியை இலக்கு வைத்து மாளி­கா­வத்தை பகு­தியில் தனது தேர்தல் வாக்­கையும் பதிவு செய்­தி­ருந்­த­தாக தெரி­ய­வ­ரு­கின்­றது. அத்­தோடு, கொழும்பு நக­ருக்குள் இருக்கும் முஸ்லிம் அர­சி­யல்­வா­தி­களில் முஜிபுர் ரஹ்­மான் மிகவும் பிர­ப­ல­மா­னவர். இங்கு இன்­னொரு முஸ்லிம் அர­சி­யல்­வாதி காலூன்­று­வதை அவ­ரல்ல, வேறு எந்த அர­சி­யல்­வா­தி­யாக இருப்­பினும் ஏற்­றுக்­கொள்ள மாட்­டார்­கள்­தானே. ஆக, முஜி­புரும் தனது இடத்தை தக்க வைத்­துக்­கொள்­வ­தற்கும் உயர்­ப­த­வி­யொன்றை பெற்­றுக்­கொள்­வ­தற்கும் கொழும்பில் ஐக்­கிய மக்கள் சக்­தியை ஸ்திரப்­ப­டுத்­திக்­கொள்­வ­தற்­கு­மாக மேயர் பத­வியை பெற்­றுக்­கொள்ளும் தேர்தல் களத்தில் கள­மி­றங்­கி­யி­ருப்பார் என்றே கூற வேண்டும்.


தேர்­த­லுக்கு நிதி­யில்லை, இந்த நிதி­யொ­துக்­கீட்டால் நாடு இன்னும் நெருக்­க­டி­களை எதிர்­கொள்ள நேரிடும் என்று நிதி­ய­மைச்சு கூறி­யதால் தேர்தல் நட­வ­டிக்­கை­க­ளி­லி­ருந்து தேர்­தல்கள் ஆணைக்­குழு பின்­வாங்க வேண்­டிய நிர்­ப்பந்­தத்­திற்கு தள்­ளப்­பட்­டது.

கடந்த வார பாரா­ளு­மன்ற அமர்­வின்­போது உள்­ளூ­ராட்சி தேர்தல் விவ­காரம் சூடு­பி­டித்­தது. எதிர்க்­கட்­சிகள் பாரா­ளு­மன்­றுக்கு உள்ளும் வெளி­யேயும் அர­சாங்­கத்­திற்கு அழுத்­தத்தை பிர­யோ­கித்து வரு­கின்­றது. பாரா­ளு­மன்ற அமர்வில் கலந்­து­கொள்ள வந்­தி­ருந்த ஜனா­தி­ப­தி­யிடம் உள்­ளூ­ராட்சி தேர்தல் குறித்து எதி­ர­ணி­யினர் கேள்­வி­களை எழுப்பி வாங்­கிக்­கட்­டிக்­கொண்ட சம்­ப­வங்கள் பலவும் இடம்­பெற்­றன.


இந்­நி­லையில், உள்­ளூ­ராட்சி தேர்­தல்கள் அறி­விப்­பா­னது உத்­தி­யோ­க­பூர்­வ­மற்­றது என சுட்­டிக்­காட்­டிய ஜனா­தி­பதி, ”தேர்­தலை பிற்­போ­ட­வில்லை. பிற்­போ­டு­வ­தற்கு தேர்தல் ஒன்று இல்லை” என்றும் கூறினார். இந்­நி­லையில் கடந்த வியா­ழக்­கி­ழமை பாரா­ளு­மன்ற அமர்வு மிகவும் சூடா­கவே இருந்­தது.


இந்­நி­லையில், “பாரா­ளு­மன்­றத்தில் எம்.பி. பத­வியில் இருந்து இரா­ஜி­னாமா செய்­ய­வேண்டாம் என்று தான், முஜிபுர் ரஹ்மான் எம்.பி.க்கு குறுஞ்­செய்தி அனுப்­பினேன்” என்று ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்க கூறினார்.


அத்­தோடு, “முஜிபுர் ரஹ்­மானை பாரா­ளு­மன்­றத்­துக்கு நான்தான் கொண்­டு­வந்தேன். அவரை பலிக்­க­டா­வாக ஆக்­கப்­போ­கின்­றனர் என்­பது எனக்குத் தெரியும். முஜிபுர் ரஹ்­மானை பாரா­ளு­மன்­றத்தில் வைத்­துக்­கொள்­வ­தற்கு நான் கடு­மை­யாக முயற்­சித்தேன் அதனை விட ஒன்­றையும் நான் கூற­வி­ரும்­ப­வில்லை” என்றும் ஜனா­தி­பதி கூறினார்.

எனினும், ஜனா­தி­ப­தியின் இந்த கூற்றை முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் முஜிபுர் ரஹ்மான் முற்­றாக மறுத்­துள்ளார்.


ஜனா­தி­பதி பாரா­ளு­மன்றில் உரை­யாற்றி சற்று நேரத்­தி­லேயே ஊடக சந்­திப்பில் கலந்­து­கொண்ட முஜிபுர், “ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்க பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பத­வியை இரா­ஜி­னாமா செய்ய வேண்­டா­மென எனக்கு ஒரு­போதும் குறுஞ்­செய்தி அனுப்­ப­வில்லை. அவர் பொய் சொல்­கிறார்” என திட்­ட­வட்­ட­மாக கூறினார்.

மேலும், மக்­களின் அவ­தா­னங்­களை திசை திருப்பும் வித­மாக இல்­லாத விட­யத்தை சோடித்து கூறு­கிறார். உய­ரிய சபையில் இவ்­வாறு கருத்துத் தெரி­விப்­பது அனுப­வமும் முதிர்ச்­சியும் மிக்க அர­சியல் தலை­வ­ருக்­கு­ரிய பக்­குவம் வாய்ந்த நடத்­தை­யாக அமை­யாது.


ஜனா­தி­பதி ரணில் விக்­ர­ம­சிங்க ஒரு­முறை பாரா­ளு­மன்­றத்தில் வைத்து என்­னுடன் கதைத்தார். எனக்கு அமைச்சுப் பத­வியை பொறுப்­பெ­டுக்­கு­மாறு 2 முறை ஆட்களை அனுப்பி அழைப்பு விடுத்தார். எனக்கு என்ன வேண்­டு­மென்றும் அவரால் அனுப்பி வைக்­கப்­பட்ட பிர­தி­நி­திகள் என்­னிடம் கேட்­டார்கள். இதைத்­த­விர ஒரு பேச்சோ அல்­லது தகவல் பரி­மாற்­றமோ எமக்குள் இடம் பெற­வில்லை என்றும் விளக்­க­ம­ளித்­துள்ளார் முஜிபுர் ரஹ்மான்.


இதற்கு எந்த பதிலும் ஜனா­தி­ப­தி­யி­ட­மி­ருந்து வெளி­யா­க­வில்லை.

இதனிடையே, கடந்த வார பாராளுமன்ற அமர்வின்போது உரையாற்றிய இராஜாங்க அமைச்சர் செஹான் சேம­சிங்க, சபை­யி­லி­ருந்து திட்­ட­மிட்டு முஜிபுர் ரஹ்­மானை வெளி­யேற்­றி­விட்­ட­தாக கொழும்பு மாவட்­டத்தை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் மற்­று­மொரு முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரை சாடி­யி­ருந்தார். எனினும், இவ்­வாறு சதி செய்­வ­தற்கு தனக்கு எந்த தேவையும் இல்லை என குறித்த உறுப்­பினர் உடனே, ஒழுங்கு பிரச்­சினை எழுப்பி கூறி­யி­ருந்தார்.


எது எவ்­வாறு இருப்­பினும், பாரா­ளு­மன்­றத்தில் ஓங்கி ஒலித்த முஸ்லிம் சமூ­கத்தின் குர­லொன்று இல்­லாத வெற்­றிடத்தை எதிர்வரும் நாட்களில் புரிந்துகொள்ள முடியுமாக இருக்கும்.- Vidivelli

No comments

Powered by Blogger.