Header Ads



70 வயது பிக்குவை அடித்துக்கொன்ற தந்தையும், சகோதரனும்..!! - நடந்தது என்ன..?


எட்டு வயதான சிறுமியை தொந்தரவு செய்ததாக கூறி அவரது தந்தை மற்றும் சகோதரனின் தாக்குதலின் பின்னர் 70 வயதான பௌத்த பிக்கு ஒருவர் உயிரிழந்த சம்பவம் ஹெட்டிபொல பகுதியில் பதிவானது . 


ஹெட்டிபொல அகாரஉட பகுதியைச் சேர்ந்த விகாரை ஒன்றின் பெளத்த பிக்குவே இவ்வாறு உயிரிழந்தார் . 


விகாரையில் வழிபாடுகளில் கலந்துக் கொள்வதற்காக பிரவேசித்த சிறுமி ஒருவரை குறித்த பெளத்த பிக்கு தொந்தரவு செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது . 


பின்னர் , பௌத்த பிக்குவை தேடி சிறுமியின் தந்தையும் சகோதரனும் விகாரைக்கு சென்றனர் . அவர் அங்கிருந்து தப்பி பிறிதொரு விகாரையில் தலைமறைவாகியிருந்தனர் . 


எவ்வாறாயினும் , பின்னர் அந்த இடத்திற்கு சென்ற சிறுமியின் தந்தையும் சகோதரனும் பௌத்த பிக்குவை தாக்கியுள்ளனர் . 


இதனையடுத்து பிரதேச மக்களின் அறிவித்தலுக்கமைய , நோயாளர் காவு வாகனம் மூலம் பௌத்த பிக்கு குளியாப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார் . 


இதன்பின்னர் , மேலதிக விசாரணைகளுக்காக குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பௌத்த பிக்கு இன்று அதிகாலை உயிரிழந்தார் . 

No comments

Powered by Blogger.