Header Ads



தாயை காப்பாற்ற தந்தையை, கொலை செய்த 16 வயது மகன்


தாக்குதலில் படுகாயமடைந்த நபர் ஒருவர் பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.


குறித்த மரணம் நேற்று (15) இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.


கடந்த 14ம் திகதி இரவு, சம்பந்தப்பட்ட நபர் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து மனைவியுடன் தகராறு செய்துள்ளார்.


அப்போது அவர் தனது மனைவியை இரும்பு கம்பியால் தாக்க முயன்றார்.


தாக்குதலில் இருந்து தாயை காப்பாற்ற இறந்தவரின் மகனும் மகளும் குறுக்கிட்டுள்ளனர், அப்போது மகன் இரும்பு கம்பியை பிடித்து தந்தையின் தலையில் தாக்கியுள்ளார்.


காயமடைந்த தந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.


கொலையை செய்த 16 வயது இளைஞன் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.


சம்பவம் தொடர்பில் பொலன்னறுவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments

Powered by Blogger.