Header Ads



பொலிஸாருக்கு எதிராக 1521 அடிப்படை உரிமை மனுக்கள்


அடிப்படை உரிமை மீறல் தொடர்பில், பொலிஸ் திணைக்களத்திற்கு எதிராக, பல்வேறு தரப்பினரால், இதுவரையில் ஆயிரத்து 521 அடிப்படை உரிமை மனுக்கள் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.


பேராசிரியர் அர்ஜுன பராக்கிரம தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனு, நேற்றைய தினம் உயர்நீதிமன்றில் அழைக்கப்பட்டது.


இதன்போது சட்டமா அதிபர் சார்பில் மன்றில் முன்னிலையாகிய சிரேஷ்ட சட்டத்தரணி சமிந்த விக்ரம முன்வைத்த சமர்ப்பணத்தில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.