Header Ads



முஸ்லிம் இனவாதிகள் சூறையாடுகிறார்கள்- வடக்கையும், கிழக்கையும் இணைக்கக் கூறுகிறேன்


வடக்கு கிழக்கை பிரிப்பதில் மிக முக்கியமான சூத்திரதாரியாக மக்கள் விடுதலை முன்னணியினர் செயற்படுவதாக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.


மேலும் வடகிழக்கு இணைக்கப்பட வேண்டும் வடகிழக்கு இணைக்கப்பட்டால் தான் கிழக்கின் இருப்பை பாதுகாக்க முடியும். இணைந்த வட கிழக்கில் தான் தமிழர்களின் இருப்பும் பாதுகாக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.


இன்று செங்கலடியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்கள் மத்தியில் பேசும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், 


“அரசியல் பயணம் என்பது கிழக்கு மாகாணத்தில் ஒரு வலிமையான கட்டமைப்பின் ஊடாக கிழக்கில் தமிழ் மக்களின் தனித்துவத்தை பேண வேண்டும்.


நல்லிணக்க அரசியல் என்பது தமிழர்களின் இருப்பை அழிக்கின்ற, அழிக்க நினைக்கின்ற அல்லது நாசமாக்க நினைக்கின்ற இந்த அரசியலுக்கு நாம் ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம்.


வடக்கு கிழக்கு இணைக்கப்பட வேண்டும் என்பதில் ஆயிரம் வீதம் உறுதியாக இருப்பவர்கள் நாங்கள். வடகிழக்கு இணைக்கப்பட வேண்டும் என்று 1987 ஆம் ஆண்டு இந்தியா 13-வது திருத்தச் சட்டத்தை ஒரு தீர்வாக கொண்டு வந்தது.


வடகிழக்கு இணைப்பு சம்பந்தமான ஒப்பந்தம் வந்த பொழுது வடகிழக்கு பிரிக்கப்பட்டது. இதேவேளை 13-வது திருத்தச் சட்டத்தை முற்றாக எதிர்ப்பதாக ஜே.வி.பி கட்சியின் உறுப்பினர் சுனில் ஹந்துன் நெத்தி ஊடக சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்.


அதேவேளை, எமது நிலைப்பாடும் சம்பந்தனின் நிலைப்பாடும் இதுவாகவே இருக்கின்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தெற்கு மக்களுக்கு விருப்பம் இல்லாத அரசியல் தீர்வு எமக்கு வேண்டாம் என்று சம்பந்தன் தெரிவித்ததற்கு அமைவாக நாங்களும் அதை எதிர்க்கின்றோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


கிழக்கில் எங்களது அரசியல் நிலைப்பாடு தமிழர்களின் நில, வள, பொருளாதார இருப்பை தமிழர்களோடு இருந்து கொண்டு முதுகில் குத்துகின்ற இந்த நல்லிணக்க அரசியலுக்கு எமது கழகம் ஒருபோதும் ஒத்துக் கொள்ளாது.


இணையாத வடகிழக்கில் காணி காவல்துறை அதிகாரம் வழங்கப்பட்டால் வடமாகணம் ஓரளவு தப்பி பிழைக்கலாம் ஆனால் கிழக்கு தப்பி பிழைக்காது. காணி காவல்துறை அதிகாரம் இல்லாமலே கிழக்கு மாகாண ஆளுநருடைய சில ஏற்கத்தகாத நடவடிக்கைகள், சில திட்டமிட்ட குடியேற்றங்களுக்கு துணை போகின்ற தன்மை சில முஸ்லிம் இனவாத அரசியல்வாதிகள் தமிழர்களுடைய நில வளத்தை சூறையாடுகின்ற நிலை ஏற்பட்டுள்ளது.


ஒருவேளை இணைந்த வடகிழக்கு இல்லாமல் தனியா கிழக்கு மாகாண சபைக்கு காணி காவல்துறை அதிகாரங்கள் வழங்கப்பட்டால் உங்களது நிலைமை என்னவாகும் என்று சிந்தித்துப் பாருங்கள்.


நாங்கள் உறுதியாக சொல்லுகின்றோம் வடகிழக்கு இணைக்கப்பட வேண்டும் இணைந்த வடகிழக்குக்கு தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய சீர் திருத்தத்துடன் கூடிய 13 ஆம் திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.


இணைந்த வடகிழக்கில் தான் கிழக்கை பாதுகாக்க முடியும் கிழக்கை பாதுகாக்க வேண்டுமானால் வடகிழக்கை இணைக்க வேண்டும்” என்றும் தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. இந்த பீ தமிலனுங்களை போல முட்டாள்கள் யாருமில்லை. வெறும் 35% இருக்கும் இவனுங்களுக்கு கிழக்கை கொடுத்துவிட்டு 65% மிருக்கும் முஸ்லிம்களும் சிங்களவர்களும் நாக்கை வழித்துகொண்டிருக்க வேண்டுமாம். வடகிழக்கு இனைபென்பது தமிழ் தீவிரவாதிகளின் நிறைவேற்ற முடியாததோறு கனவு மட்டுமே.

    இவர்களின் கொட்டத்தை அடக்க மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகமான சிங்கள மக்கள் கூடியமர்த்தி அங்கு இனி விகிதாசார சமநிலை பேனப்பட வேண்டும்

    ReplyDelete

Powered by Blogger.