Header Ads



நீண்ட நாட்களின் பின், வாயைத் திறந்த ரஞ்சன் - ரணிலிடம் விடுத்த கோரிக்கை


சிங்கப்பூர் அதிபர் லீ குவான் யூவை பின்பற்றி, ராஜபக்சர்களை வேட்டையாட வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்ஜன் ராமநாயக்க ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.


தம்மை ஆட்சிக்கு கொண்டுவந்தார்கள் என்பதற்காக ராஜபக்சவினருக்கு நன்றியுடையவராக இருப்பாராயின், நாட்டை முன்னேற்ற முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


செய்தியாளர்களிடம் பேசியபோது இவ்வாறு கூறிய ரஞ்சன் ராமநாயக்க, ரணிரை, அதிபர் ஆக்கியது திருடர்களின் குழுவே.அந்தத் திருட்டுக் குழு, அதிபர் ஆக்கியதால் தான், எனக்கு அதிபரின் பொதுமன்னிப்பு கிடைத்துள்ளதாகக் கூறினார்.


மேலும் பேசிய அவர், திருட்டுக் குழு, தமது உயிரை பாதுகாப்பதற்கு ரணில் விக்ரமசிங்கவை மெய்பாதுகாவலராக கொண்டுவந்தது. அவருக்கு நன்றி இருக்குமாயின், அவர்களுக்கு துரோகமிழைக்க முடியாது.இது மிகவும் கடிமான சூழ்நிலை.


இதுபோன்ற நிலைமை சிங்கப்பூரின் லீ குவாங் யூவிற்கு ஏற்பட்டது. ரெட் ட்ரகன் மற்றும் பிளக் ட்ரகன் என்ற பாதாள உலகக் குழுக்கள் இரண்டே அவரை ஆட்சிக்கு கொண்டுவந்தனர்.


லீ குவான் யூ ஆட்சிக்கு வந்த பின்னர் முதலில் என்ன செய்தார்.?தமக்கு சுவரொட்டி, ஒட்டிய, தமக்கு பதாகை ஏந்திய, தம்மை அதிகாரத்திற்கு கொண்டுவந்த பாதாள உலகக் குழுக்களின் தலைவர்களை கொலை செய்தார்.


ரணில் விக்ரமசிங்க அவ்வாறு செய்வாரா என்பது தெரியவில்லை.நான் அதிபரிடம் பகிரங்கமாக கோரிக்கை ஒன்றை முன்வைக்கின்றேன்.


லீ குவான் யூவை பின்பற்றினால் வரலாற்றில் இடம்பிடிக்க முடியும்.லீ குவான் யூ, ரெட் ட்ரகன் மற்றும் பிளக் ட்ரகன் பாதாள உலக குழுக்களுக்கு செய்ததை ரணில் விக்ரமசிங்க செய்ய வேண்டும்” - என்றார்.

No comments

Powered by Blogger.