Header Ads



நெஞ்சம் நெகிழச் செய்யும் செய்தி..!


- Azeez Luthfullah -


நினைத்தாலே நெஞ்சம் நெகிழச் செய்யும் செய்தி..! 


துருக்கியில் துயர் துடைப்புப் பணியில் மும்முரமாக இயங்கி வருகிற இந்த சகோதரரின் கதையைக் கேட்டால் துடித்துப் போவீர்கள்..! 


இந்தப் பேரிடரில் இவர் தன்னுடைய தாயை இழந்தார். தந்தையை இழந்தார். அன்பு மனைவியைப் பறிகொடுத்தார். அழகு செல்லங்களை - மழலை மணம் மாறா பிள்ளைகள் இருவரை - இழந்தார் 


என்றாலும் சற்றும் துவண்டு விடவில்லை.


இறை விருப்பத்தை ஏற்றுக் கொண்டவாறு, துயர் துடைப்புப் பணியில் மும்முரமாக இயங்கி வருகிறார்.


சற்றே இளைப்பாறுவதற்காக இறை நினைவில் - திக்ரு- மூழ்கி விடுகிறார். 


பொறுமையின் வடிவமாய் நிற்கிறார். உலக முஸ்லிம்கள் அனைவருக்கும் உத்வேகம் அளிக்கிற முன்னுதாரணமாக மிளிர்கிறார். 


மாஷா அல்லாஹ். நினைத்தாலே மெய் சிலிர்க்கிறது..! 


அல்லாஹ் இவருடைய - சகோதரர் உஸ்மான் அவர்களின் - இந்த சேவையை ஏற்றுக் கொள்வானாக. ஆமீன்

No comments

Powered by Blogger.