Header Ads



பிரபாகரன் தற்போது எங்கு உள்ளார் தெரியுமா..?


புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் உள்ளதாக, உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் வெளியிட்ட கருத்து, இன்று பேசுப்பொருளாக மாறியுள்ளது. இந்த விடயம் தொடர்பில் இலங்கையிலுள்ள தமிழ், சிங்கள அரசியல்வாதிகள் மாறுப்பட்ட கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.


தமிழ்நாட்டின் தஞ்சாவூரில் உள்ள முள்ளிவாய்க்கால் முற்றம் நினைவிடத்தில் உலகத் தமிழர் பேரவையின் தலைவர் பழ.நெடுமாறன், பிரபாகரன் தொடர்பாக கருத்து வெளியிட்டிருந்தார். அது குறித்து பொதுமக்கள் பாதுபாப்பு முன்னாள் அமைச்சரும், முன்னாள் ராணுவ வீரருமான ரியர் அட்மிரல் சரத் வீரசேகரவிடம் பிபிசி தமிழ் வினவியது.


பிரபாகரன் பல லட்சக்கணக்கான உயிர்களை கொலை செய்துள்ளமையினால், அவர் தற்போது நரகத்திலேயே இருப்பார் எனவும், பழ.நெடுமாறன் நரகத்திற்கு சென்றே அவரை அழைத்து வர வேண்டும் எனவும் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவிக்கின்றார்.


''பிரபாகரன் தற்போது நரகத்தில் உள்ளார். நரகத்திலிருந்து வருகைத் தருவதற்கு பல பிறவிகள் காத்திருக்க வேண்டும். பல லட்சம் மக்களை அமானுஷ்யமாக கொலை செய்துள்ளமையினால், அவர் தற்போது நரகத்திலேயே இருக்க வேண்டும். அப்படியென்றால், இவரும் நரகத்திற்கு சென்றே அவரை மீண்டும் அழைத்து வர வேண்டும்." என ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.


இந்தியாவிடம் டிஎன்ஏ அறிக்கையை ஏன் பகிரவில்லை?

பிரபாகரன் உயிரிழந்தமையை உறுதிப்படுத்துவதற்கான மரபணு பரிசோதனை அறிக்கையை இந்தியா தொடர்ச்சியாக கேட்ட போதிலும், அந்த அறிக்கை இன்று வரை வழங்கப்படவில்லை. அதற்கான காரணம் என்ன என்பது தொடர்பிலும் சரத் வீரசேகரவிடம் நாம் வினவினோம்.


''அதனை செய்வதற்கான தேவை எமக்கு கிடையாது. பிரபாகரனை கொன்று, தமிழீழ விடுதலைப் புலிகளை இல்லாதொழித்தோம். மரபணு பரிசோதனை அறிக்கையை காண்பித்து, யாருக்கும் அதனை உறுதிப்படுத்தும் தேவை எமக்கு இல்லை. அதற்கான தேவை என்ன? பிரபாகரன் எம்முடைய எதிரி. இந்தியாவின் எதிரி அல்ல. அதனால், யாருக்கும் உறுதிப்படுத்த வேண்டிய தேவை எமக்கு கிடையாது.


பிரபாகரன் உயிரிழந்து விட்டார் என்பது தொடர்பில் எமக்கு முழுமையான நம்பிக்கை உள்ளது. பிரபாகரன் உயிரிழந்ததை கருணாஅம்மான் உறுதிப்படுத்தினார். அதனால் யாருக்கும் உறுதிப்படுத்த வேண்டிய தேவை எமக்கு கிடையாது" என சரத் வீரசேகர கூறினார்.

2 comments:

  1. பிரபாகரன் 2009 மே மாதம் முள்ளிவாகாலில் வெள்ளை கொடியோடு தப்பி செல்ல எத்தனித்த போது இலங்கை இராணுவத்தால் மண்டை பிளக்கப்பட்டு கொடூரமாக செத்தான். அவனோடு அவனுடைய புலி தீவிரவாத கூட்டமும் வேரும் வேரடி மண்ணுமாக அழிக்கப்பட்டு புதைக்கப்பட்டார்கள். மீதியாக எஞ்சியிருப்பதுஅரசியல் ரீத்தியான புலி எச்சங்களே

    ReplyDelete
  2. பொதுமக்களை மாடாக்கும் அடுத்த நாடகம் அரங்கேறுகின்றது. அரசில் உள்ள கீழ்த்தரமானவர்கள் தமிழ்நாட்டு சோரம் போன மந்தி(ரி)களுடன் இணைந்து இலங்கையில் உள்ளூராட்டசித் தேர்தல் நடைபெறவேண்டும் என்ற கருத்தை மாற்றும் வகையில் பொதுமக்களைத் திசைதிருப்பும் நாடகத்தின் முக்கிய அங்கம் தான் பிரபாகரன் உயிரோடு இருக்கின்றான். உண்மையென்னவென்றால் பிரபாகரன் உயிரோடு இருந்தால் என்ன சுடுகாட்டில் மண்ணோடு மண்ணாகிப் போனாலென்ன இந்த நாட்டில் உள்ள புத்திஜீவிகளுக்கு அந்த இரண்டும் சமம். ஆனால் பொதுமக்களை மாடாக்க ஏதாவது தந்திரத்தைப்போட நினைத்த அரசாங்கத்தக்கு தென் இந்தியா வழங்கிய தந்திரம் தான் இந்த நாடகம். எனவே பொதுமக்கள் இது பற்றி அலட்டிக் கொள்ளாது இருக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

    ReplyDelete

Powered by Blogger.