Header Ads



பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ பணிப்பாளராக நியமனம்


முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன திருகோணமலை பெட்ரோலிய முனையத்தின் (Trinco Petroleum Terminal Ltd) தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். 


இந்திய எண்ணெய் நிறுவனம் மற்றும்  இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் கூட்டு நிறுவனமாக இந்த நிறுவனம் திருகோணமலை எண்ணெய் குதங்களில் வர்த்தக செயற்பாடுகளை முன்னெடுக்கின்றது.


இந்த பதவிக்கு மேலதிகமாக அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ பணிப்பாளராகவும் கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.


கரச்சி பல்கலைக்கழகத்தில் இராணுவ பட்டப்படிப்பை நிறைவு செய்துள்ள அட்மிரல் விஜேகுணரத்ன, மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு மற்றும் மூலோபாய கொள்கைகள் தொடர்பான பட்டப் பின் படிப்பை நிறைவு செய்துள்ளார்.

No comments

Powered by Blogger.