Header Ads



பேட் மேன், பஸ் மேன் என பல புனைப்பெயர்கள் சூட்டிக்கொண்டாலும் அதற்கு சளைக்கமாட்டேன்


பேட் மேன்,பஸ் மேன் என பல்வேறு புனைப்பெயர்கள் சூட்டிக்கொண்டாலும் அதற்கு சளைக்கமாட்டேன் என்றும் பெயர் சூட்டுபவர்களுக்கு சொல்ல வேண்டியது என்னவெனில் நாட்டிற்கு தீர்வுகளை கொடுக்கும் முன் படித்த பாடசாலைக்கு ஏதாவது செய்யுமாறும் கூறுவதாகவும், என்ன சொன்னாலும் எனது சேவையை நிறுத்தமாட்டேன் என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.


எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று (12) தம்புத்தேகம நகரில் இடம்பெற்ற கலாவெவ தேர்தல் தொகுதி பிரசார பொதுக்கூட்டத்தில் உரையாற்றும் போது  தெரிவித்தார்.


நாட்டுக்கு பணம் திரட்ட முடியுமான விவசாயியை அரசனாக்கும் தலைமைத்துவ தகுதியை ஐக்கிய மக்கள் சக்தி  பெற்றுள்ளதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் இந்நாட்டில் இதுவரைக்கும் இல்லாத விவசாயப் புரட்சியை ஐக்கிய மக்கள் சக்தி  ஆரம்பிக்கும் எனவும், இதன் மூலம் ஸ்மார்ட் விவசாயியை உருவாக்குவதாகவும் இடைத்தரகர்களிடம் சிக்காமல் ஆன்லைனில் தனது பொருட்களை விற்பனை செய்யும் அமைப்பை ஏற்படுத்துவதாகவும் அவர் தெரிவித்தார்


No comments

Powered by Blogger.