Header Ads



வாகனங்கள் பழுதடைவது கிடுகிடு என உயர்வு - காரணம் என்ன..?


வீதி சீரமைப்பு மற்றும் பராமரிப்பு இல்லாததால் வாகனங்கள் பழுதடைவது அதிகரித்துள்ளதாக பயணிகள் போக்குவரத்து சங்கங்கள் தெரிவிக்கின்றன.


நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக வீதி திருத்தம் மற்றும் பராமரிப்பு பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக வீதி விபத்துக்களும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


வாகன உதிரிபாகங்களின் விலைகள் அதிகரித்துள்ள பின்னணியில் பேருந்துகளை தொடர்ந்து திருத்தியமைக்க வேண்டியுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.


இதனால் பேருந்து தொழில்துறை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments

Powered by Blogger.