Header Ads



உள்ளூராட்சி மன்றத் தேர்தலை, திட்டமிட்டபடி நடத்த உயர் நீதிமன்றம் அனுமதி

 


திட்டமிட்டபடி உள்ளூராட்சித் தேர்தலை முன்னெடுக்க, தேர்தல் ஆணைக்குழுவை உயர்நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை, 10 ஆம் திகதி பணித்துள்ளது.


உள்ளூராட்சி மன்றத் தேர்தலை திட்டமிட்டபடி நடத்துவதற்கு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.


உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இதன்போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.


அண்மையில், ஓய்வுபெற்ற இராணுவ கேணல் டபிள்யூ.எம்.ஆர். விஜேசுந்தரவினால் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை இடைநிறுத்த உத்தரவிடுமாறு கோரி ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது.


நாட்டில் பாரிய பொருளாதார நெருக்கடி நிலவும் நிலையில், உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதால் நாட்டுக்கோ, பொதுமக்களுக்கோ எந்தப் பயனும் ஏற்படாது என சுட்டிக்காட்டியுள்ள அவர், தேர்தலை தடுக்க தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு உத்தரவிடுமாறு கோரிக்கை விடுத்திருந்தார்.


அத்துடன், உள்ளூராட்சி மன்றத் தேர்தலை தாமதிக்காது நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு உத்தரவிட கோரி, ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களும் மனுவொன்றினை தாக்கல் செய்திருந்தனர்.


இந்தநிலையில் குறித்த இரண்டு மனுக்கள் மீதான விசாரணைகளையும் முடிவிற்கு கொண்டுவருவதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.


பல கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தை மந்தமாக முன்னெடுத்திருந்த நிலையில் தேர்தல் பிரச்சாரங்கள் இனிமேல் சூடு பிடிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.


No comments

Powered by Blogger.