Header Ads



வரதா சண்முகநாதனின் தாராள மனசு


புலம்பெயர்ந்து கனடாவில் வாழ்பவர் யாழ்ப்பாணத்தில் அவருக்குச் சொந்தமான காணியை காணியற்றோருக்கு பகிர்ந்தளித்துள்ளார்.


வேலணை – கரம்பொன் மேற்கை சொந்த இடமாகக் கொண்ட திருமதி வரதா சண்முகநாதன் என்பவரே தனக்குச் சொந்தமான காணியை 9 குடும்பங்களுக்கு தலா இரண்டு பரப்பு வீதம் பகிர்ந்தளித்துள்ளார்.


பகிர்ந்தளிக்கப்பட்டோருக்கான காணி உறுதி வழங்கும் நிகழ்வு கடந்த சனிக்கிழமை மேலைக் கரம்பொன் முருகமூர்த்தி ஆலய மண்டபத்தில் அப்பகுதியின் கிராம சேவையாளர் புருசோத்தமன் தலைமையில் நடைபெற்றது.


இந்த நிகழ்வில் திருமதி வரதா சண்முகநாதனை பின்பற்றி புலம் பெயர் நாடுகளில் வாழ்பவர்கள் காணியற்றோருக்கு உதவ வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

No comments

Powered by Blogger.