Header Ads



"தேர்தல் நடத்த வேண்டுமானால், போராட்டம் செய்யுங்கள் மாற்று வழியில்லை"


அரசாங்கத்தை மீறி தேர்தல் நடத்த தேர்தல் ஆணைக்குழுவுக்கு சக்தி இல்லை என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.


இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தேர்தல் நடத்த அரசாங்கம் விடாது.


ஆகவே தேர்தல் நடத்த வேண்டுமானால், நீங்கள் தெருப்போராட்டம் செய்யுங்கள். வேறு மாற்று வழியில்லை.


இன்று தேர்தல் ஆணைக்குழு தலைவர் நிமல் புஞ்சிஹேவா கட்சி பிரதிநிதிகளை அழைத்து நடத்திய கூட்டத்தின் தொனிப்பொருளாக, இந்த செய்தியை தான் நான் புரிந்து கொண்டேன் என அவர் குறிப்பிட்டுள்ளார். 

No comments

Powered by Blogger.