Header Ads



இது அமைச்சரின் அறிவுரை


இறக்குமதி செய்யப்படும் முட்டைகளை பேக்கரி தொழிலில் பயன்படுத்துவதற்கான தொடர் வழிகாட்டல்களை தயாரிக்குமாறு கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்திற்கு அமைச்சர் மஹிந்த அமரவீர பணிப்புரை விடுத்துள்ளார்.


அதன்படி, இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளை பேக்கரி பொருட்களுக்கு பயன்படுத்தும் போது, ​​கையுறைகளை பயன்படுத்த வேண்டும் மற்றும் முட்டை ஓடுகளை பாதுகாப்பாக அப்புறப்படுத்த வேண்டும் அல்லது அழிக்க வேண்டும். மீதமுள்ள முட்டை ஓடுகளை சுற்றுச்சூழலில் வெளியிடக்கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.


பல நாடுகளில் பரவி வரும் பறவைக் காய்ச்சல் வைரஸ் நுழைவதைத் தடுக்கும் நோக்கில் இந்த வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.


இலங்கை சந்தையில் ஏற்பட்டுள்ள முட்டை தட்டுப்பாட்டைக் குறைப்பதற்காக முட்டைகளை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.


ஆனால் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் பறவைக் காய்ச்சல் பரவி வருவதால் கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் துறை அதற்கு அனுமதி அளிக்கவில்லை.


எனினும் தற்போதுள்ள முட்டை தட்டுப்பாடு மற்றும் தேவையை கருத்தில் கொண்டு தற்காலிகமாக முட்டை இறக்குமதிக்கு கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளது.


அதன்படி, முட்டைகள் பேக்கரி தொழிலுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.