Header Ads



அந்தரங்க உறுப்பை வெட்டியவரை தேடி பொலிஸார் வேட்டை


கோழி தொடர்பிலான வாக்குவாதம் கைகலப்பாக மாறியதில், ஒருவர் மற்றொருவரின் அந்தரங்க பிரதேசத்தை கத்தியால் வெட்டி காயப்படுத்தியுள்ளார்.


இந்த சம்பவம் பதுளையில் இடம்பெற்றுள்ளது.


மடுல்சீம- பிட்டமாருவ கிராமத்தில் இரு நண்பர்களுக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றி, ஒருவரின் விந்தகத்தை வெட்டும் அளவுக்குச் சென்றுள்ளது.


இந்தச் சம்பவம், நேற்று முன்தினம் (13) இரவு 8 மணியளவில் இடம்பெற்றுள்ளதுடன், வாய்த்தர்க்கம் நீண்டு, ஒருவர் மற்றையவரின் விந்தகத்தை வெட்டும் முயற்சிக்கு சென்றுள்ளமை தெரியவந்துள்ளது.


காயமடைந்த நபருக்கு மற்றைய நபர் இரண்டு கோழிகளை வளர்ப்பதற்கு கொடுத்துள்ளதுடன் அதில் ஒரு கோழி ​காணாமல் போனமையால் இப்பிரச்சனை ஏற்பட்டதாக காயமடைந்தவர் பொலிஸில் தெரிவித்துள்ளார்.


காயமடைந்த 41 வயதானவர் பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் ​மேலதிக சிகிச்சைக்காக பதுளை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதுடன், சந்தேகநபரை கைதுசெய்வற்கான விசாரணைகளை மடுல்சீம பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். 


( பாலித ஆரியவன்ஸ)

No comments

Powered by Blogger.