Header Ads



2 காரணங்களினால், தேர்தலை நடத்த முடியாது - நீதிமன்றத்த்திற்கு அறிவிப்பு

 
திட்டமிட்டபடி உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்த முடியாது என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது . நிதி உள்ளிட்ட போதிய வசதி கிடைக்க பெறாமையினால் முன்னதாக உறுதியளித்தப்படி தேர்தலை நடத்த முடியாதென தேர்தல் ஆணைக்குழு உயர்நீதிமன்றுக்கு அறிவித்துள்ளது . 


தேர்தலை நடத்துவதற்காக தம்மால் கோரப்பட்ட நிதி , திறைசேரி செயலாளரினால் வழங்கப்படவில்லை தேர்தல் ஆணைக்குழு முன்னதாக அறிவித்திருந்தது . 


அதேவேளை , வாக்குச்சீட்டு அச்சிடலுக்கு போதியளவு பணம் கிடைக்கப்பெறாத நிலையில் அச்சிடல் பணிகள் அரசாங்க அச்சத்தினால் இடைநிறுத்தப்பட்டிருந்தன . 


இதனால் , அரசாங்க அச்சகம் உரிய வகையில் வாக்குசீட்டுகளை வழங்காமையினால் எதிர்வரும் 22 , 23,24 மற்றும் 28 ஆம் திகதிகளில் இடம்பெறவிருந்த உள்ளூராட்சி தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்பை காலவரையறையின்றி பிற்போட தேர்தல் ஆணைக்குழு தீர்மானித்தது . 


இதனிடையே , எதிர்வரும் மார்ச் 9 ஆம் திகதி உள்ளூராட்சி தேர்தலை நடத்த தீர்மானிக்கப்பட்டிருந்த போதிலும் திட்டமிட்டவகையில் தேர்தலை நடத்துவது சாத்தியமில்லையென உயர் நீதிமன்றத்துக்கு தேர்தல் ஆணைக்குழு இன்று அறிவித்துள்ளது . 


எவ்வாறாயினும் , உள்ளூராட்சி மன்றத் தேர்தலை , உரிய தினத்தில் நடத்த முடியாமல்போனால் , ஏற்றுக்கொள்ளப்பட்ட வேட்பு மனுக்கள் , வாக்களிப்பு இடம்பெறும் வரையில் , செல்லுபடியாகும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது .

No comments

Powered by Blogger.