Header Ads



மார்ச் 9 இல் உள்ளுராட்சித் தேர்தல் நிச்சயம் நடத்தப்படும்


மார்ச் 9 ஆம் திகதி உள்ளுராட்சிமன்ற தேர்தல் நிச்சயம் நடத்தப்படும் என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரான பசில் ராஜபக்ஷ, அனைத்து தொகுதி அமைப்பாளர்களுக்கும் தெரிவித்துள்ளார் என இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த கூறியுள்ளார்.


எனவே அதனை எதிர்கொள்வதற்கு தயாராகுமாறு பசில் ராஜபக்ஷ ஆலோசனை வழங்கியுள்ளார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற சந்திப்பின்போதே இந்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.