Header Ads



துருக்கி, சிரியா எல்லையில் மீண்டும் 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் - அச்சத்தில் மக்கள் (படங்கள்)


 துருக்கி மற்றும் சிரியா எல்லையில் மீண்டும் ஒரு சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.


இந்த நிலநடுக்கமானது அதே பகுதியில் தற்போதும், ரிக்டர் அளவில் 6.3 என பதிவாகியுள்ளதுடன் 2 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக நிபுணர்கள் தரப்பு தெரிவித்துள்ளது.


நாட்டின் மிக மோசமான நிலநடுக்கம் ஏற்பட்ட இரண்டு வாரங்களுக்குப் பிறகு துருக்கியின் அன்டாக்யா நகரில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாகவும் இதனால் கட்டடங்கள் சேதமாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  


கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் 46,000 மக்கள் பலியான பகுதியிலே தற்போதும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதனிடையே, உள்ளூர் நேரப்படி இரவு 8 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கமானது எஞ்சியுள்ள மக்களை மீண்டும் பீதியில் தள்ளியுள்ளது.

மோசமாக பாதிக்கப்பட்டிருந்த சுவர் ஒன்று இடிந்து விழுந்ததில் பல பேர் காயங்களுடன் தப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது. 




No comments

Powered by Blogger.