Header Ads



ராஜபக்ஷ குடும்பத்தின் 5 சத பணம்தான் வெளிநாட்டில் உள்ளது, சிக்க வேண்டாம் என்கிறார் நாமல்


ராஜபக்ஷ குடும்பத்தின் குறைந்தபட்சம் ஐந்து சதம் வெளிநாடுகளில் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷதெரிவித்துள்ளார்.


வெளிநாடுகளில் மறைத்து வைத்துள்ள பணத்தை மீளக் கொண்டு வந்து நாட்டை அபிவிருத்தி செய்வோம் என சில அரசியல் கட்சிகள் வழங்கும் வாக்குறுதிகளில் சிக்கிக் கொள்ள வேண்டாம் எனவும் அவர் கூறினார்.


2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலிலும் இவ்வாறு கூறியதாக நாமல் தெரிவித்தார்.


உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பான மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

1 comment:

  1. துபாய் அமீரின் மாளிகை முன்னால் நிமிர்ந்து நிற்கும் ஐந்து மாடி ஹோட்டல் நாமலுக்குச் சொந்தமானது என அங்கு தொழில் செய்யும் முக்கிய ஒருவர் கூறியதாக நாம் அறிகின்றோம். அவை தவிர நைஜீரியா, இத்தாலி, அபூதாபியில் என்ன ஹோட்டல்களும் கம்பனிகளும், மிகப் பெரிய வர்த்தக மையங்களும் இருப்பதை தெரிந்தவர்கள் நன்கு அறிவார்கள். அவையெல்லாம் மிகவிரைவில் வௌிவரும். பொறுத்திருந்து பார்ப்போம்.

    ReplyDelete

Powered by Blogger.