Header Ads



கல்வியமைச்சின் அருகே பதற்றம் 48 பிக்குகளும், முதலிகேயும் கைது


போராட்டத்தில் ஈடுபட்ட வசந்த முதலிகே உள்ளிட்ட 57 பேரை பொலிசார் கைது செய்தனர்.


கைது செய்யப்பட்டவர்களில் 48 பிக்கு மாணவர்களும் உள்ளடங்குவர்.


கல்வி அமைச்சின் வளாகத்திற்குள் பலவந்தமாக பிரவேசித்த குற்றச்சாட்டின் கீழ் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகே மற்றும் பிக்கு மாணவர்கள் உள்ளிட்டோர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.


பலவந்தமாக அமைச்சு வளாகத்திற்குள் பிரவேசித்த குழுவினர், பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழகத்தில் கல்வியை மீள ஆரம்பிக்குமாறும், கைது செய்யப்பட்ட மாணவர் செயற்பாட்டாளர்களை விடுவிக்குமாறும் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

No comments

Powered by Blogger.